ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத்தொடரா? 2024 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது? தமிழக அரசு திட்டம்!!

ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத்தொடரா? 2024 முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது? தமிழக அரசு திட்டம்!!

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் வழக்கமாக தொடங்கும். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி மதம் 7,8ஆம் தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளதால் ஜனவரி 2வது வாரத்தில் கூட்டத்தொடரை தொடங்கலாமா அல்லது பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்கலாமா என ஆலோசனைசெய்யப்பட்டு வருகிறது.

ஆளுநரின் உரையில் அரசின் நிதிநிலை, புதிய திட்டங்கள், அரசின் கொள்கைகள் குறித்த அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் கடந்த ஆண்டு அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்தும் ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார். தற்போதுள்ள சூழலில், மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசு தயாரித்து வழங்கிய உரையில் சில பகுதிகளை நீக்கியும், சில பகுதிகளை சேர்த்தும் ஆளுநர் வாசித்தார்.

கடந்த ஓராண்டு காலமாகவே பல்வேறு விஷயங்களில் ஆளுநர் மற்றும் தமிழக அரசு இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. இதனையடுத்து ஆண்டு முதல் கூட்டத்தை ஆளுநரை அழைத்து நடத்தலாமா அல்லது அவரை அழைக்காமலேயே கூட்டத்தொடரை நடத்தலாமா என்பது குறித்த ஆலோசனையும் நடைபெற்று வருவதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

2 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

4 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

33 minutes ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

48 minutes ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

1 hour ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

2 hours ago

This website uses cookies.