என்னது 2015ஐ விட பெட்டரா? கேள்வி கேட்ட அரசியல் கட்சி பிரமுகர்.. பதில் பேச முடியாமல் போனை கட் செய்த இயக்குநர் லிங்குசாமி!
மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் உழைப்பை பாராட்டி இயக்குனர் லிங்குசாமி தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னைக்கு வர விமானங்கள் ஏதும் இல்லாததால் கடந்த 3 நாட்களாக தஞ்சாவூரில் இருந்தேன். சென்னை மழை நிலவரத்தை பார்த்து கவலையடைந்தேன். நேற்று இரவு இங்கு வந்து இறங்கியதும், அடையாறில் ஒருவரை இறக்கி விடுவதற்காக காரில் சென்றேன்
ஏர்போர்ட்டில் இருந்து அடையாறு சென்றுவிட்டு பின்னர் வளசரவாக்கம் வரும்வரை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் என்ன அழகா வேலை பார்த்திருக்காங்க. 2015-ம் ஆண்டு வெள்ள பாதிப்பை பார்த்தாலோ என்னவோ இம்முறை சரியான திசையில் முன்னேறி சென்றுகொண்டிருப்பது தெரிகிறது.
தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி அங்கிருக்கும் பலரை மீட்க வேண்டும். இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கம் இதனை விரைவுபடுத்தும் மற்றும் விரைவில் நகரத்தை மீட்டெடுக்கும் என்று நம்புகிறேன். இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்ய விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவுக்கு ஒரு பக்கம் ஆதரவு விமர்சனங்கள் வந்தாலும் பெரும்பாலானோர் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பிரமுகர் ஒருவர் லிங்குசாமிக்கு போன் போட்டு பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
அதில் லிங்குசாமியிடம் மெயின் ரோட்டை மட்டும் நீங்கள் பார்த்துவிட்டு ட்விட்டரில் பதிவிடுகிறீர்கள், எதற்காக 2015 ஆண்டுடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என கேட்க, லிங்குசாமி பதில் பேச முடியாமல் கட் செய்துவிட்டார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.