தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு : அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திருச்சி பொன்மலை பட்டி 46-46 A பகுதிகளில் உள்ள பொதுமக்களிடத்தில் குறை கேட்டு மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொதுமக்களிடத்தில் மனுக்களை பெற்று குறைகளை கேட்டு அறிந்தார்.
அதன்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு மனுக்களை அனுப்பி வைக்கும்படி பகுதி கிளை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த குறை தீர்க்கும் முகாமில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு,தண்ணீர் வசதி, பட்டா வழங்குதல்,அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்ற கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதில் கோட்டத் தலைவர் மதிவாணன், பகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ். வட்டச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பகுதி நிர்வாகிகள் வட்ட கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 20-21ல் சுமார் ஒருலட்சத்து இன்பத்தெட்டாயிரத்திற்கு மேற்பட்ட இடைநின்ற மாணவர்களை தேடி கண்டுபிடித்து 22-23பள்ளிகளின் சேர்த்துள்ளோம்.

தேர்வு எழுது பயப்படுகிற மாணவர்களுக்கு மோட்டிவேஷன் வகுப்புகள், ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

கல்வியில் பின்தங்கிய மாவட்டம் இல்லாமல் அனைத்து மாவட்டங்களும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. முதலமைச்சர உத்தரவுபடி அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை அழைத்து ஜூம் மீட்டிங் மூலமாக கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு நானே நேரடியாக சென்றுள்ளேன். அங்கு தேர்வு எழுதாத மாணவர்களின் பெற்றோர்களை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு தேர்வுக்கு மாணவர்களை அனுப்பி வையுங்கள்.

எதற்காக அவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்ற காரணத்தையும் கேட்கச் சொல்லி உள்ளோம். தேர்வுக்கு வராத மாணவர்களாக இருந்தாலும் சரி, சரியாக எழுதவில்லை என்றும் சொல்லும் மாணவர்களுக்கு சப்ளிமென்ட்ரி தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதம் நடக்கும் பொழுது இந்த மாணவர்களை ஒரு மாதத்தில் சிறப்பு வகுப்புகள் எடுத்து அதே பள்ளியில் வழங்கப்பட்டு உடனடியாக அவர்கள் தேர்வு எழுதும் வைக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளோம் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

8 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

8 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

9 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

9 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

10 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

10 hours ago

This website uses cookies.