பாஜக முன்னாள் நிர்வாகியான எஸ்.வி. சேகர் தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், எஸ்.வி. சேகர் புதிய கட்சித் தொடங்கப்படும் என அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் எஸ்.வி. சேகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது, உங்களுக்கு முன்செய்தியாக ஒன்று சொல்கிறேன். தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கான கட்சி தொடங்கப்படும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 தொகுதிகளில் பிராமணர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கு பிராமணர்கள் மட்டும் வாக்களித்தால் போதும் என்று கூறினார்.
எங்கள் நோக்கம் வெற்றி அல்ல. பிராமணர்களின் வாக்குகளை ஒன்றிணைத்து, பிராமணர்களின் பலத்தை நிரூபிப்பதுதான். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மற்ற கட்சிகள் வருங்காலத்தில் பிராமணர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் என்றும் சேகர் சொன்னார்.
புதிய கட்சித் தொடங்க பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்தான் உத்வேகம் அளித்தார் என்றும் சேகர் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சேகர், பிராமணர்கள் என்றவுடன் டிவிஎஸ் ஐயங்கார், எஸ்வி சேகர், சோ போன்றவர்களையே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பிராமணர்களில் பலரும் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்று கூறினார்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
This website uses cookies.