தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும் பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும் நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு ஆரஞ்ச் மற்றும் பச்சை நிற பாக்கெட்டில் ஒரு ரூபாயும் நீல நிற பாக்கெட்டில் 1.50 ரூபாயும் குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை பால் அட்டை பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. பால் விலை குறைப்பால் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் திணறுகிறது.
தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகள் கூடுதல் கொள்முதல் விலையை எதிர்பார்க்கின்றனர்.
ஆவின் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டு உள்ளது. இது 500 மி.லி. 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த பால் விற்பனை அதிகரிப்பதன் வாயிலாக ஆவின் நஷ்டத்தை வெகுவாக குறைக்க முடியும்.
எனவே ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் தயாரிப்பு 80 சதவீதம் அளவிற்கு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக ஆரஞ்ச் நிற பால் அட்டை விற்பனையை தவிர்த்து சிவப்பு நிற பால் அட்டையை அதிகளவில் பொது மக்களுக்கு வினியோகம் செய்ய ஆவின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அக்., 15ம் தேதி முதல் இதை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் கூடுதல் விலை கொடுத்து பால் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஆவின் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியும் கேள்விக்குறியாகி உள்ளது.
பொதுவாக நீல நிற பாக்கெட்டில் 3% கொழுப்பு சத்தும், 8.5% இதர சத்துக்கள் உள்ளன, பச்சை நிற பால் பாக்கெட்டில் 4.5% கொழுப்பு சத்தும், 8.5% இதர சத்துகள் உள்ளன.
ஆரஞ்சு நிற பாக்கெட்டில் 6% கொழுப்பு சத்தும், 9% இதர சத்துக்களும் உள்ளன. ஆவின் நிறுவனம் வாயிலாக ஒரு லிட்டர் பசும் பால், 32 ரூபாய்க்கும், எருமை பால் 41 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில் இருந்து கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள் பிரித்து எடுக்கப்பட்டு, வெண்ணெய், நெய், பால் பவுடர் தயாரிக்கப்படுகின்றன. நீலம் மற்றும் பச்சை நிற பாக்கெட்டில், அதிகளவில் சத்துக்கள் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால் ஆவின் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கிறது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை, இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டது. கொள்முதல் இழப்பு, சத்துக்கள் அதிகளவில் பிரிக்காதது, உற்பத்தி செலவு, வாகன வாடகை உள்ளிட்டவை காரணமாக, ஆரஞ்ச் பால் விற்பனையால், ஆவின் நிறுவனத்திற்கு லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
அதேநேரத்தில், சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை வாயிலாக, லிட்டருக்கு எட்டு முதல் 10 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. எனவே, ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து, சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆரஞ்ச் பாலுக்கு தனி நுகர்வோர் உள்ளனர். இவர்களை சிவப்பு நிற பால் பாக்கெட்டை வாங்கவைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
This website uses cookies.