டிரெண்டிங்

ஆபாசமாக திட்டிய தவெக நிர்வாகி.. தீர்க்கவில்லையா மாநாட்டு பாக்கி? பரபரப்பு புகார்

தவெக மாநாட்டுக்குச் சென்ற வாடகை பாக்கி கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “நாங்கள் இருவரும் ஆக்டிவ் ஓட்டுநர்கள். நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் அபிராமபுரம் பகுதி துணைச் செயலாளர் மோகன் என்பவர் எங்களை தொடர்பு கொண்டு, தவெக மாநாட்டிற்கு தொண்டர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டார்.

இதன் அடிப்படையில், சம்பளத்தொகை பேசி விட்டு மாநாட்டுக்கு அழைத்துச் சென்றோம். அக்டோபர் 27ஆம் தேதி தொண்டர்களை அழைத்துக் கொண்டு மாநாட்டிற்குச் செல்லும் போதே வாகனத்திற்குள் தொண்டர்கள் மது குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை மாநாட்டில் இறக்கி விட்டோம். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி மோகன் எங்களிடம் கூறியபடி சாப்பாடு எதுவும் எங்களுக்கு வாங்கித் தரவில்லை.

இருப்பினும், தவெக மாநாடு முடிந்து அனைவரையும் பாதுகாப்பாக மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தோம். இதன் பிறகு மோகன், தான் கூறிய சம்பளத் தொகையை எங்களுக்குத் தரவில்லை. பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், ஆட்களை வைத்து எங்களை தாக்கவும் முயன்றார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் எங்களை ஆபாசமாக திட்டி விரட்டினார்.

எனவே, நாங்கள் இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மோகன் மற்றும் சுதாகர் ஆகிய இருவர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக, நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் நடைபெற்றது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, போக்குவரத்து நெரிசல், 15 – 20 கி.மீ வரை தொண்டர்கள் நடந்தது, செண்டர்மீடியனில் ஆபத்தான முறையில் உறங்கியது உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது. இந்த நிலையில் தான், ஓட்டுநர்களின் இந்தப் புகார் தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : திடீரென புதைக்கப்பட்ட உடல்.. பெண்ணின் பரபரப்பு வாக்குமூலம்

Hariharasudhan R

Recent Posts

பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…

11 hours ago

ரோஹித்,கோலிக்கு பிசிசிஐ கெடுபிடி…பறந்து வந்த அதிரடி உத்தரவு…!

சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…

12 hours ago

சல்மான் கானுடன் லிப் லாக்… தீயாய் பரவிய ராஷ்மிகா வீடியோ.. இறுதியில் டுவிஸ்ட்!

தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…

13 hours ago

உண்மை இதுதான்..இன்ஸ்டாவில் நடிகை திடீர் போஸ்ட்..காட்டு தீயாய் பரவும் அந்தரங்க வீடியோ.!

நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…

13 hours ago

ஃபயர் மோடில் ‘ராம் சரண்’…பிறந்தநாள் பரிசாக படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…

14 hours ago

ஆசையாக அழைத்த பெண்.. உள்ளே போனதும் லாக்.. திருப்பூரில் திகைத்த இளைஞர்!

திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…

15 hours ago

This website uses cookies.