பாஜக தனித்து போட்டியிட்டதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் தேர்தலில் தனித்து போட்டியிட்டதாகவும், மக்களிடம் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதி 126வது வார்டு மந்தைவெளி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அமைப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சுந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதனையடுத்து, பொதுமக்கள் குஷ்பு உடன், புகைப்படம் எடுத்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பு கூறியதாவது :- வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை. வாக்களிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு இருந்து குறை சொல்லக்கூடாது. மக்கள் வெளியே வந்து, 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் என எதையும் பாராமல் மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஜனநாயக ரீதியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
நான் எனது ஓட்டினை செலுத்தி விட்டேன்.எனவே மக்கள் வீட்டுக்குள்ளே இல்லாமல் கண்டிப்பாக வெளியே வந்து மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என்பதை அவர்கள் சிந்தித்து அவர்களுடைய வாக்கினை செலுத்த வேண்டும். பாஜக தனித்து போட்டியிடுவதில் தப்பில்லை எங்களுக்கு தைரியம் இருந்ததால் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் வெற்றி வாய்ப்பை பற்றி தற்பொழுது பேச முடியாது.
தமிழகத்தில் பாஜகவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. நோட்டாவோடு பாஜகவை ஒப்பிட்டு பார்த்து கொண்டு இருக்கும் வேலையில் 4 பேர் சட்டசபைக்கு சென்று வீட்டார்கள். காலம் மாறி வருகிறது. மக்களை சோம்பேறி ஆக்குவதற்கு பணம், டிவி, மின்விசிறி, கொலுசு கொடுக்கிறார்கள். மக்களுக்கு கல்வி, தண்ணீர், வீடு, பெண்களுக்கு பாதுகாப்பு, அனைவருக்கும் தொழில் இதுதான் வேண்டும், என்றார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.