சென்னை : மாற்றுத்திறனாளி ஒருவர் மீது கார் ஏற்றியதால் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் சிம்புவுக்கு நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 18-ந்தேதி தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், சாலையில் அமர்ந்தபடி மெல்ல மெல்ல சாலையை கடக்க முயன்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று முதியவர் மீது ஏறி, இறங்கியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ஆனால், அந்த கார் நிற்காமலேயே சென்று விட்டது.
இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (70) என்பது தெரியவந்தது. மேலும், முதியவர் மீது மோதிய கார் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.