சென்னை : மாற்றுத்திறனாளி ஒருவர் மீது கார் ஏற்றியதால் உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் சிம்புவுக்கு நெருங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 18-ந்தேதி தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், சாலையில் அமர்ந்தபடி மெல்ல மெல்ல சாலையை கடக்க முயன்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று முதியவர் மீது ஏறி, இறங்கியது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ஆனால், அந்த கார் நிற்காமலேயே சென்று விட்டது.
இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (70) என்பது தெரியவந்தது. மேலும், முதியவர் மீது மோதிய கார் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில், விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.