சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை நடித்து முடித்து தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் படம் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது,.
இந்த நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரஜினியின் அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரியதாக உள்ளதால் அதற்கான சிகிச்சை எடுக்கப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்தது. பின்னர் அதற்கான STENT பொறுத்தப்பட்டு சிகிச்சை நிறைவுபெற்றது.
சிகிச்சை முடிந்தாலும் ரஜினிகாந்த் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். 3 நாட்கள் சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் இன்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில் ரஜினி சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், ரஜினியின் நண்பரும், மருத்வருமான சொக்கலிங்கம், அவரின் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க: முன்னாள் எம்பி மகன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை ; முக்கிய கொலை வழக்கில் போலீசார் அதிரடி.. பதற்றம்… !!!
ரஜினிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சிங்கப்பூரில் செய்யப்பட்டது. 73 வயதாகும் அவர் இனிதான் கவனமுடன் செயல்பட வேண்டும.
ரத்தக்குழாயில்ொழுப்பு படிவது வழக்கமாக வயதாகும் போது ஏற்படும். அதனால் தூக்கமின்மை, சர்க்க அளவு மாற்றம், ரத்த அழுத்தம் நேரலாம். ரத்தக் கொழுப்பு அதிகரிக்க கவலை மட்டுமே காரணம் என கூறும் அவர், மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி தான் தேவை.
சரியான உணவு, நல்ல தூக்கம் கெடும் போது ரத்தக் குழாயில்ொழுப்பு சேரும். அதுதான் தற்பேது ரஜினிக்கு நடந்துள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயிலும் வீக்கம் இருந்ததால் தற்போதைய காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை. அதற்கு பதிலாக STENT பொறுத்தப்பட்டுள்ளது. ரஜினி தற்போது மது அருந்துவதில்லை, புகைப் பழக்கம் இல்லை.. மருத்துவர்கள் அறிவுரையை கடைப்பிடிக்கும் நபர் என்பதால் அவருக்கு பிரச்சனை ஏதும் இல்லை என கூறியுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.