சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறித்து திமுக அரசை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தை பதம் பார்த்து வருகிறது. கோவை, மதுரை போன்ற மாவட்டங்கள் மழையில் சிக்கிய மீண்டது.
அதற்குள் சென்னையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக எடுக்கப்பட்டது. நேற்றே தமிழக அரசு துரிதமாக முன்னெச்சரிக்கைகைளை விடுத்தது. காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்ககளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
அதே போல 16ஆம் தேதி ரெட் அலர்ட் என வானிலை மையம் அறிவித்த நிலையில் இன்றே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் விடாமல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசு மீது விமர்சனங்களை வைத்து வரும் நடிகை கஸ்தூரி தற்போது பெய்து வரும் கனமழை குறித்து அமைச்சர்களை வசைபாடியுள்ளார்.
இது குறித்து அவர் தனது X பக்கத்தில், எங்க ஏரியா. இப்போ… வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது. முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் prepare ஆயிட்டோம், ஆனாலும் damage தான்.
எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க…. என பதிவிட்டுள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…
இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…
உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…
This website uses cookies.