டிரெண்டிங்

பட்டம் கொடுக்கும் திமுக…கட்டம் கட்டும் கோர்ட் : சூடு பிடிக்கும் செந்தில்பாலாஜி விவகாரம்!

மீண்டும் அமைச்சரான பின்பு முதல்முறையாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறங்கி இருப்பதால் திமுகவினர் குஷி அடைந்துள்ளனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, 471 நாட்களைச் சிறையில் கழித்த நிலையில், பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் பிணை கிடைத்து வெளியே வந்துள்ளார்.

அவர் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட முயற்சிகள் எப்படியிருக்கும், வழக்கின் நகர்வுகள் எந்தத் திசையில் இருக்கும் என்பது பற்றிய விவாதங்கள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
சிறைக்குள் செந்தில் பாலாஜி இருந்தபோது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வென்றது. கோவை தொகுதியில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையை வென்றது பெரிதும் பேசப்பட்டது.


அதிலும் வேட்பாளர் தேர்வு உட்பட தேர்தல் பணிகளில் செந்தில் பாலாஜியின் பரிந்துரையும், ஆலோசனையும் இருந்ததாக, தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின், கோவை திமுகவினரே சமூக ஊடகங்களில் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அவருடைய மீண்டும் வருகை, மேற்கு மண்டலத்துக்கு, குறிப்பாக கோவை திமுகவுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்குமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், கோவையில் திமுகவுக்கு அசாத்தியமான வெற்றியைத் தேடித் தந்ததில் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு மகத்தானது. நீண்ட இடைவெளிக்குப் பின், அவர் மீண்டும் வந்திருப்பது, கோவைக்கு மட்டுமின்றி மேற்கு மண்டலம் முழுவதுமே திமுகவுக்கு மிகப்பெரிய எழுச்சியைத் தரும் என திமுகவினர் நம்புகின்றனர்.

கடந்த இரண்டு தேர்தல்களிலும் திமுக மகத்தான வெற்றியைப் பெற்றது போலவே, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அவரது வருகை, நல்ல துவக்கமாக இருக்கும். கோவையின் மீது முதல்வர் ஸ்டாலின் தனி அக்கறை காட்டி வருகிறார்.இங்கு செந்தில் பாலாஜி களத்தில் இருந்து பணி செய்யும்போது, அரசுக்கு பெரும் பக்கபலமாக இருப்பார் என முதல்வர் நம்பி உள்ளார். கோவைக்கு பொறுப்பு அமைச்சரான பின் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்து வருகிறார்.

கோவைகள் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழையால் நீர் தேங்கி உள்ளன. பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தும் கால்வாய்கள் நிரம்பியும் பாதிப்புகள் ஏற்பட்டது. அந்த பாதிப்புகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து சரி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மழையால் பாதித்த பகுதிகளையும் மேற்கொள்ளும் பணிகளையும் மின்சார துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி சிங்காநல்லூர் அருகே கதிரவன் கார்டன் பகுதியில் உள்ள வாய்காலில் தேங்கி இருக்கும் குப்பைகளை அகற்றும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அவரிடம் அப்பகுதி மக்கள் தங்களில் வீடுகள் இருக்கும் பகுதிக்கு வந்து ஆய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அமைச்சர் அங்கு சென்று பார்வையிட்டார்.

அவரிடம் மக்கள் பலர்,சாலைகளை அமைத்து தர வேண்டும்.
வாய்காலை முறையாக பராமரித்து அந்த நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருக்கும்படி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர் , உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது பொதுமக்கள் பலர் எங்கள் ஏரியாவுக்கு வந்து பாருங்களே, நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என அவரை அலையா விருந்தாளியாக பலரும் அழைத்தனர்.

கொங்கு மண்டலம் குஷி : பாலாஜிக்கு நீலகிரி சேர்வதால் பிஷி

கோவையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில், 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியைத் தழுவியது. அதிமுக கூட்டணி, அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது. ஜெயலலிதா இருந்தபோதும்கூட, 2011 சட்டமன்றத் தேர்தலில் பத்தில் ஒரு தொகுதியில் திமுக வென்ற நிலையில், அவர் மறைவுக்குப் பின், கோவை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக தோற்றதால், மாநிலத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தும், கோவை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போனது.

அதனால் மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சராக உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றிகளை குவிக்க முடியாது என தலைமை கணக்கு போட்டது. தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் செந்தில் பாலாஜிதான் ஒரே தீர்வு என்ன முடிவு செய்தது.
இதையடுத்து

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு, இருவருக்கும் பதிலாக, அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் கோவை மாவட்டத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கோவை, கரூர் மட்டுமல்லாமல், கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் செந்தில் பாலாஜிக்கு தனக்கான ஆதரவாளர்களை உருவாக்கியுள்ளார். இந்தமுறை, கோவை, கரூர் மட்டுமல்லாமல் கொங்கு மண்டலத்தின் மற்ற மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அமைச்சரவை மாற்றத்தில் ராமச்சந்திரன் நீக்கப்பட்டிருந்தார். நீலகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரன், தற்போது அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் நீலகிரிக்கு அமைச்சர் இல்லாத நிலை நிலவுகிறது.
பொதுவாக அமைச்சர் இல்லாத மாவட்டத்தில், பொறுப்பு அமைச்சர் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு செந்தில் பாலாஜி பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கொங்கு மண்டலம் குஷியான போதும் ,அமைச்சருக்கு நீலகிரியும் சேர்ந்து வர உள்ளதால் அமைச்சர் பிஸியாகி உள்ளார் என்கின்றனர் அவர் ஆதரவாளர்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் மட்டுமே வந்துள்ளார். அவர் தலைக்கு மீது கத்தி தொங்கிக் கொண்டே உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் விழலாம். அதற்குள் பொறுப்பு அமைச்சர் கூடுதல் பொறுப்பு என்று அவருக்கு பட்டம் கட்டும் வேலைகளை அரசு செய்து வருகிறது. கொங்கு மண்டலத்தில் திமுக சூடம்போல் கரைந்து வருவதை கட்சித் தலைமை உணராமல் இல்லை.

அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் எக்கு கோட்டையாக்கி உள்ளனர். இதை தடுப்பதற்கு முள்ளை,முள்ளால் எடுப்பது போல், செந்தில் பாலாஜி தான் தகுந்த ஆயுதமாக திமுக கருதி உள்ளது. மேலும் செந்தில் பாலாஜி திமுகவினருக்கு வாரி வழங்குவதில் திருப்பதி பாலாஜியாகவே காட்சி அளிக்கிறார். இதனால் திமுகவினர் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளால் கொங்கு மண்டலத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரளுமா… இல்லை திமுக கட்டும் கரை உடையுமா… என்பது கோர்ட்டின் தீர்ப்பைப் பொறுத்து அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

11 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

12 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

14 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

16 hours ago

This website uses cookies.