சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையின்றி தலையிடக் கூடாது என்று காவல்துறைக்கு ஏடிஜிபி அருண் அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார்.
நிலம், வீடு மற்றும் பணப் பிரச்சனைகளில் போலீஸார் தேவையில்லாமல் தலையிடக் கூடாது என்று நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், சில பிரச்சனைகளில் காவல்துறையினர் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்ற சூழலில், மக்கள் போலீசாரின் உதவியை நாடுகின்றனர். அப்போது, சட்ட விதிகளை போலீசார் மீறுவதாக புகார்கள் எழுகின்றன.
இந்த நிலையில், சிவில் பிரச்சினைகளில் தேவையில்லாமல் போலீசார் தலையிடக் கூடாது என்று போலீசாருக்கு ஏடிஜிபி அருண் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது:- பணத்தகராறு, சொத்து தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். தலையிட வேண்டிய சூழல் வந்தால் மாவட்ட எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். மீறினால் சட்ட விரோதமாக கருதப்படும், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும், என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மீரட் பகுதியில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…
This website uses cookies.