பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கூடுகிறது
அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் இப்போது ஆயத்தமாகி வருகின்றன. ஆனால், அதிமுக – பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக புகைச்சலில் இருந்து வருகிறது. அதிமுகவுக்கு எதிரான கருத்துக்களை அண்ணாமலை தொடர்ந்து கூறி வருவதால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக, அண்ணாவைப் பற்றி கூறிய கருத்துக்கள் அதிமுகவினரிடையே கோபத்தை உண்டாக்கியது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆவேசமாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தனர். அதேவேளையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் அதிரடியாக அறிவித்தார்.
இதனிடையே, பா.ஜ.க. பற்றியோ, கூட்டணி குறித்தோ நிர்வாகிகள் யாரும் பொதுவெளியில் கருத்துகள் தெரிவிக்க கூடாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவை பிறப்பித்ததாக தகவல் வெளியாகியது. இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பிரச்சினை எதுவும் இல்லை என்று அறிவித்தார். இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.45 மணிக்கு இந்த கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணியை தொடரலாமா? அல்லது முறித்துக் கொள்ளலாமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேவேளையில், ஜெயலலிதா பாணியில் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடுவது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே, அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்டறிவார் என்றும் தெரிகிறது. அதனடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.