தொழிலாளர் நலன் என்று வேஷம் போடும் திமுக அரசு… போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக ; இபிஎஸ் வலியுறுத்தல்

போக்குவாத்துத்‌ தொழிலாளர்களின்‌ கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத
விடியா திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 20.12.2023-ஆம்‌ தேதி அண்ணா தொழிற்சங்கப்‌ பேரவை மற்றும்‌ கூட்டமைப்பு சங்கங்களான PMK, TMC, HMS, DMDK மனித உரிமைகள்‌ கழகம்‌, புதிய நீதிக்‌ கட்சி, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள்‌ நலச்‌ சங்கம்‌, CITU‌ தலைமையிலான 7 சங்கங்கள்‌
உள்ளடக்கிய கூட்டுக்‌ குழு முதலியவை இணைந்து, தமிழக அரசுக்கும்‌, போக்குவரத்துக்‌
கழகத்திற்கும்‌ வேலை நிறுத்த நோட்டீஸ்‌ வழங்கியது.

தொழிலாளர்‌ நலத்‌ துறை சார்பில்‌ கடந்த 27.12.2023 அன்று முதல்‌ கட்ட சமரசப்‌
பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில்‌ எந்தவித முன்னேற்றமும்‌ இல்லை. இரண்டாவது
கட்டமாக 6.1.2024 அன்று போக்குவரத்துத்‌ துறை அமைச்சருடன்‌ பேச்சுவார்த்தை
நடைபெற்றது. அதில்‌, தொழிற்சங்கங்களின்‌ கோரிக்கைகள்‌ குறித்து முதலமைச்சருடன்‌
கலந்துபேசி இரண்டு நாட்களில்‌ நல்ல பதில்‌ சொல்வதாகக்‌ கூறிய போக்குவரத்துத்‌ துறை அமைச்சர்‌, இதுவரை தொழிலாளர்களுக்கு நன்மை தரும்‌ எந்த பதிலையும்‌ அளிக்கவில்லை என்று தொழிற்சங்கங்கள்‌ கூறியுள்ளன.

அதன்‌ பின்பு, 8.1.2024 அன்று தொழிலாளர்‌ நலத்‌ துறையில்‌ நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில்‌ முடிந்ததால்‌, 9.1.2024 முதல்‌ வேலை நிறுத்தம்‌ துவங்கிய நிலையில்‌, 10.1.2024 அன்று சென்னை உயர்நீதிமன்றம்‌, பொங்கல்‌ திருநாளை முன்னிட்டு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள்‌ முன்வர வேண்டும்‌ என்றும்‌, ஒய்வு பெற்ற தொழிலாளர்கள்‌ பொங்கல்‌ திருநாளைக்‌ கொண்டாட

இடைக்கால நிவாரணமாக ரூபாய்‌ 2,000/- வழங்க அரசுக்கு அறிவுரை வழங்கியதோடு,
ஜனவரி மாதம்‌ 9 மற்றும்‌ 10-ஆம்‌ தேதிகளில்‌ வேலை நிறுத்தத்தில்‌ கலந்துகொண்ட தொழிலாளர்களை நிர்வாகம்‌ பழிவாங்கக்‌ கூடாது என்றும்‌ உத்தாவிட்டது. ஆனால்‌, இந்த விடியா திமுக அரசு இடைக்கால நிவாரணமாக தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய்‌ கூட வழங்க மறுத்துவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றும்‌, பொங்கல்‌ திருநாளை தமிழக மக்கள்‌ அவரவர்‌ குடும்பத்தினருடன்‌ அவர்களது சொந்த ஊரில்‌ கொண்டாடுவதற்கு வசதியாக,
வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்‌ கோரிய எனது அறிவுரையை ஏற்று, அனைத்துத்‌ தொழிற்சங்கங்களும்‌ வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ்‌ பெற்று, பயணிகள்‌ பொங்கலுக்கு அவரவர்‌ ஊர்களுக்குச்‌ செல்ல, இரவு பகலாக பணியாற்றினார்கள்‌.

பொங்கலுக்குப்‌ பிறகு, தொழிலாளர்‌ நலத்‌ துறை அலுவலர்கள்‌ முன்பாக நான்கு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில்‌ தொழிற்சங்கத்துடன்‌ ஊதிய உயர்வு
ஒப்பந்தப்‌ பேச்சுவார்த்தை நடத்த அரசு குழு அமைத்தது. ஆனால்‌, அந்தக்‌ குழு
இன்றுவரை கூடவில்லை. இறுதியாக, 6-ஆம்‌ கட்டப்‌ பேச்சுவார்த்தையில்‌ பணியில்‌ உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை வழங்கியது.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்‌ தொகையை
வழங்க 6.2.2024 அன்று உச்சநீதிமன்றம்‌ உத்தரவிட்டது. உடனே இந்த விடியா
தி.மு.க. அரசு போக்குவரத்து வருவாய்த்‌ துறை சார்பாக மதுரை உயர்நீதிமன்றக்‌ கிளையில்‌ புதிதாக ஒரு வழக்கைத்‌ தொடர்ந்துள்ளது. இதனால்‌, ஒய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌ 27.2.2024 அன்று பல்லவன்‌ இல்லம்‌ முன்பு உண்ணாவிரதம்‌ இருந்தனர்‌.

நாடாளுமன்றப்‌ பொதுத்‌ தேர்தல்‌ தேதி அறிவிப்புக்கு முன்பு, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையைத்‌ துவங்க வேண்டும்‌, இல்லையென்றால்‌ தொழிலாளர்களுக்கு
உடனடியாக ரூ. 5,000/- இடைக்கால நிவாரணம்‌ வழங்க வேண்டும்‌ என்று தொழிற்சங்கங்கள்‌ கோரிக்கை வைத்துள்ளதாகச்‌ செய்திகள்‌ தெரிய வருகின்றன.

அதைத்‌ தொடர்ந்து, தொழிலாளர்‌ நலத்‌ துறை அலுவலகத்தில்‌ இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில்‌, தொழிலாளர்‌ நலன்‌ என்று வேஷம்‌ போடும்‌ இந்த விடியா திமுக அரசு, போக்குவாத்துத்‌ தொழிலாளர்களின்‌ கோரிக்கையினை ஏற்று, இடைக்கால நிவாரணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும்‌ என்றும்‌, உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையினை முழுமையாக வழங்க வேண்டும்‌ என்றும்‌ பொம்மை முதலமைச்சர்‌
திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்‌, எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

12 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

13 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

13 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

14 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

14 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

14 hours ago

This website uses cookies.