விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டு, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் கூட்டணிகள் திசைமாறுமா..? என்று கேள்விகள் எழுந்தன.
ஆந்திர மாநிலம் விஜயவாடா கனக துர்க்கை அம்மன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். என்டிஆர் மாவட்டம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்க்கை அம்மன் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சுவாமி தரிசனம் செய்து வைத்த தீர்த்த பிரசாதங்கள் அம்மன் புகைப்படம் வழங்கினர். இதனை அடுத்து, கோவிலுக்கு வெளியே செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றபோது, புனிதமான அம்மனை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு அரசியல் குறித்து பேச விரும்பவில்லை, என்றார்.
இதனைத் தொடர்ந்து, திருப்பதிக்கு வரக்கூடிய எடப்பாடி பழனிசாமி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.