திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை 7 சதவீத அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை 7 சதவீத அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
2014 இல் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த போது, பெட்ரோல், டீசல் விலை குறைந்திருந்தது. தற்போது 2024 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இன்னும் விலை குறைக்காமல் அதிகமான வரி போட்டு மக்கள் மீது பெரிய சுமையை சுமத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: CM ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சு… முதல்ல மருமகன்… இப்போ மகன் ; அண்ணாமலை சொன்ன தகவல்!!
இதனை மத்திய அரசு வன்மையாக கண்டிப்பதோடு, மாநில அரசு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என அறிவித்தும், இதுவரை குறைக்கப்படவில்லை. இதனால் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் அனையிலிருந்து ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு திமுக அரசு சரியான முறையில் அணுகாததால் உச்சநீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பின்படி, கர்நாடக அரசு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
சில ஊடங்கங்கள் பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றது. அது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு. தேர்தல் பத்திரங்கள் வெளியிடுகிறது. அதில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும், அதிகமான நிதி பெற்றிருக்கிறது. திமுக 650 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்று இருக்கிறது. பிரதமர் அடிக்கடி தமிழகம் வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை.
மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வரும்போது ஏதாவது ஒரு திட்டத்தை துவக்கி வைத்து சென்றிருந்தால் ஏதாவது பயன் கிடைத்திருக்கும். அதிமுகவை அழிக்க ஒருவராலும் முடியாது. அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு துறைகள் வளர்ச்சி பெற்றது. பல்வேறு திட்டங்கள் இல்லங்கள் தோறும் சென்றடைந்து இருக்கிறது.
மக்களுக்கான சேவையை அதிமுக அளித்து வருகிறது.
இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மக்கள் எதிர்பார்க்கிற வெற்றி கிடைக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பையே மதிப்பதில்லை. மாநில உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றால் தமிழகம் பாதிக்கப்படும் நேரத்தில் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம், சுதந்திரமாக நின்று, நாடாளுமன்றத்தில் பேசி தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் இதுவே ஒரு வழி, எனக் கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.