நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தேர்தல் அறிக்கையையும் அறிவித்து விட்டது. பாஜகவும் அடுத்தடுத்த கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதேவேளையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், கடந்த இரு தினங்களாக இரு கட்ட வேட்பாளர்களை அதிமுக அறிவித்து விட்டது.
இந்த நிலையில், 133 வாக்குறுதிகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
முக்கிய அம்சங்களாவது :-
மகளிருக்கு மாதம் ரூ.3000 வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
நீட் தேர்வுக்கு மாற்றுத்தேர்வு முறை கொண்ட வர வலியுறுத்தப்படும்
கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வலியுறுத்தப்படும்
கிளாம்பாக்கத்தில் இருந்து ஒரகடம் வரை மெட்ரோ ரயில் இயக்க வலியுறுத்துவோம்
ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க நடவடிக்கை
முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும்
ஆளுநர் பதவியில் நியமனம் செய்யும் போது மாநில அரசின் கருத்துக் கேட்க நடவடிக்கை
குற்றவழக்கு சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்
மத்திய அரசு அறிவித்த ஒசூர் விமான நிலையத்தை விரைந்து முடித்திட வலியுறுத்துவோம்
நாகை, திருவாரூர், புதுச்சேரியின் காரைக்கால் உள்ளடங்கிய ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க வலியுறுத்துவோம்
கோவையில் மத்திய அரசின் என்ஐடி கல்வி நிறுவனத்தை அமைக்க வலியுறுத்துவோம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள், ஈழத்தமிழர்களை உட்படுத்த வலியுறுத்தல்
அப்பளம், குண்டு வத்தல், பரமத்தி வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைக்க வலியுறுத்துவோம்
தென்மாவட்டங்களின் நலன் கருதி மதுரையில் ஐஐடி, ஐஐஎம் அமைக்க வலியுறுத்தல்
குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி தினசரி கூலியாக ரூ.450 வழங்க வலியுறுத்தல், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.