நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு திமுக மாஜி எம்பியை பாஜக தனது கட்சிக்கு இழுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தொகுதி பங்கீட்டில் ஒருவேளை உடன்பாடு ஏற்படாவிட்டால், கூட்டணி மாற்றம் ஏற்படும் நிலையும் உள்ளது.
அதேவேளையில், கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இருந்து வந்த அதிமுக வெளியேறிய நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணியை அமைக்க தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, பாமக, தேமுதிகவிடம் தனித்தனியே ரகசிய பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், பாமக 12 தொகுதிகளையும், தேமுதிக 6 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு தமிழக கூட்டணி தொடர்பாகவும், பிரதமர் மோடி வருகிற 25 ஆம் தேதி தமிழகம் வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
இதனிடையே, அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைய உள்ளனர். டெல்லியில் இன்று காலை நடக்கும் நிகழ்ச்சியில் அதிமுகவை சார்ந்த 18 முன்னாள் எம்எல்ஏக்கள், திமுகவை சார்ந்த ஒரு மாஜி எம்பியும் இன்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இணையவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் அண்ணாமலை இன்று மாலையே சென்னை திரும்பவுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாஜி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைவது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.