அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ள நிலையில், திட்டமிட்டபடி நடக்கும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். இவர்களின் இருவரது தலைமையில் கடந்த சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போதிய வெற்றிகளை பெறவில்லை.
எனவே, ஒற்றைத் தலைமை தேர்வு செய்தால் மட்டுமே அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லது என்று கட்சியின் நிர்வாகிகள் கூறி வந்தனர். அந்த வகையில், இந்தக் கோரிக்கை கடந்த சில நாட்களாக வலுத்து வருகிறது. 7 நாட்களாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியே தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜுன் 23ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது. தற்போது, எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதிமுகவில் மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 62 பேர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்-க்கு வெறும் 11 மாவட்ட செயலாளர்களே ஆதரவளித்துள்ளனர்.
இதனால், பொதுக்குழுவை கூட்டி ஒற்றைத் தலைமையை தேர்வு செய்து விட வேண்டும் என்று இபிஎஸ் தரப்பினர் முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நிதமன்ற்ததில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒற்றைத் தலைமை தேவையில்லை என்று கூறி வரும் ஓபிஎஸ் தரப்பினர், இன்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், பொதுக்குழு நடக்கும் ஸ்ரீவாரி மண்டபத்தில் இபிஎஸ் தரப்பினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர் ஓபிஎஸின் கோரிக்கையை நிராகரித்ததுடன், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு இபிஎஸ் – ஒபிஎஸ் இணைந்துதான் அழைப்பு விடுத்ததாகவும், எனவே, திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்று பதிலளித்துள்ளனர்.
இதனால், கொதிப்படைந்து போன ஓபிஎஸ், தங்களின் கடிதம் குறித்து பதில் கிடைக்காவிட்டால், உயர்நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பெரும்பாலான ஆதரவு தனக்கு இருப்பதால், ஓபிஎஸின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
ஜுன் 23ம் தேதி அதிமுகவில் பெரும் பிரளயமே வெடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.