எல்லாம் முறைப்படிதான் நடக்குது… மெச்சூரிட்டி இல்லாமல் யோசிக்கலமா…? நீதிமன்றத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்..!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு நடைபெற உள்ள நிலையில், நாளுக்கு நாள் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு பெருகி வருகிறது.

தற்போது வரை மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 65க்கும் மேற்பட்டோரின் ஆதரவு அவருக்கு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேவேளையில், முக்கிய தலைவர்களான மைத்ரேயன் உள்பட ஓபிஎஸ் நம்பிக்கைக்குரிய நபர்களும் இபிஎஸ் பக்கம் தாவி விட்டனர். இதனால், ஓபிஎஸ்க்கு இருந்த ஆதரவு 11ல் இருந்து 6ஆக குறைந்துள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, நாளை நடைபெறும் பொதுக்குழுவில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், எனவே, நாளை நடக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு இபிஎஸ் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பினர், பொதுக்குழுவில் பங்கேற்பது தொடர்பாக இன்று மாலைக்குள் முடிவு செய்து சொல்வதாகக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 3 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அப்போது, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் 23 தீர்மானங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானங்களையும் ஏற்க முடியாது என்று ஓபிஎஸ் கூறியதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதோடு, கட்சியின் சட்ட விதிகளை மீறி செயல்பட மாட்டேன் என்றும் ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார்.

அதேவேளையில், நாளை நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கூடாது என்று இபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு, செயற்குழு கூடுவதாகவும், அழைப்பை ஏற்று அனைத்து உறுப்பினர்களும் வந்தடைந்து விட்டதாகக் குறிப்பிட்ட இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும் என்று கூறினார்.

வேறு அஜெண்ட ஏதும் இருந்தால் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்ற விதியை காட்டுங்கள் என்று ஓபிஎஸ் தரப்பி கேள்வி எழுப்பியது. மேலும், பொதுக்குழுவில் விதிகளை திருத்தம் செய்ய இபிஎஸ் முடிவு செய்து விட்டதாகவும், அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் கொடுக்காமல் விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, பொதுக்குழுவில் திடீரென ஒரு விவகாரத்தை எழுப்ப மாட்டார்களா..? என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினர்.

பொதுக்குழுவில் முடிவெடுப்பவர்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் என்றும், முன்மொழிவுகளுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தந்த பிறகே, பொதுக்குழுவில் வைக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதியில்லை என்றும், வழக்கமான பணிகள் தவிர வேறு என்ன வேண்டுமானாலும் பொதுக்குழுவில் நடக்கலாம் என்ற மனநிலையில் செல்ல முடியாது என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதனைக் கேட்ட இபிஎஸ் தரப்பினர், பொதுக்குழுவுக்கு எதிர்பார்ப்புடன் உறுப்பினர்கள் வருவார்கள், இதெல்லாம் நடக்கும் என இப்போதே கூறுவது முதிர்ச்சியற்றது என்றும், கூட்டத்தில் என்ன செய்யனும், என்ன செய்யக் கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய முடியாது என்று எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.

நாளை பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில், நீதிமன்றத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பினரிடையே காரசாரமான வாதம் நடைபெற்று வருகிறது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

4 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

5 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

6 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

6 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

7 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

7 hours ago

This website uses cookies.