தேர்தல் முடிவுகளுக்கு பின்பு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுவது தொடர்பான கேள்விக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பதிலளித்துள்ளார்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349 ஆவது சதய விழாவையொட்டி மதுரை ஆணையூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் படிக்க: கஞ்சா சப்ளைக்கு வாட்ஸ்அப் குழு… சிறுவர்கள் தான் டார்க்கெட் ; அட்மினை கொத்தாக தூக்கிய போலீசார்…!!!!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் ராஜன் சொல்லப்பா கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும்,” என்றார்.
தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுவது தொடர்பான கேள்விக்குஇ “கிஞ்சிற்றும் இடமில்லை”, எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவை கட்டிக் காக்கின்ற பெரும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இரட்டை இலை, தலைமை கழகம், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயலாற்றி வருகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி மிகப்பெரிய ராஜ தந்திரியாக பணியாற்றி வருகிறார். மற்றவர்களைப் போல தன்னை ஒப்படைப்பதற்காக அல்ல. அதிமுகவை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவைப் போல எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை காக்க பணியாற்று வருகிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அதிமுக ஆகியவைகளில் எடப்பாடி பழனிச்சாமி தனக்குரிய பாணியில் செயலாற்றுகிறார்.
அதிமுக தலைமை மாற்றம் என ஊடகங்களில் வரும் செய்தி தவறானவை. நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்ல. அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தகுதி அறிந்து திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிச்சாமி, மழைக்காலங்களில் பேரிடம் மீட்புத்துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அறிவிப்பையும் திமுக அரசு கொடுக்கவில்லை,” என கூறினார்.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.