சென்னை : அதிமுக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்ததாக ஓ.பன்னீர்செல்வம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக நேற்று தேர்வு செய்யப்பட்டா. மேலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த அதிமுக ஆவணங்களை தனது வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுவிட்டார். மேலும், அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியதுடன், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சூறையாடப்பட்டன.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வன்முறை, மோதல்களால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்து, தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர்.
இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து ஆவணங்களை அள்ளிச் சென்றதாக ஓபிஎஸ் தரப்பினர் மீது ராயப்பேட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் அளித்துள்ள மனுவில், 300 ரவுடிகளுடன் அதிமுக அலுவலகத்திற்குள் புகுந்து முக்கிய ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்டு தரும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்தை சூறையாடிய,
ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், புகழேந்தி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.