அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீசார் முறையான பாதுகாப்பு அளிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் மாறிமாறி தாக்கி கொண்டனர். மேலும், ராயப்பேட்டையில் சாலையோரத்தில் இருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை அடித்து உதைத்தனர்.
இதையடுத்து, சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அதிமுக அலுவலத்திற்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும், யாருக்கு உரிமை உள்ளது என்பது குறீத்து ஜுலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இருதரப்புக்கும நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதனிடையே, அதிமுக அலுவலகடிததிற்கு வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது, இபிஎஸ் தரப்பு அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது.
அதாவது, அதிமுக பொதுக்குழுவையொட்டி தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி போலீஸாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை பாதுகாப்பு அளிக்கவில்லை. அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் தரப்பினர் அத்துமீறி உள்ளே நுழைந்து ஆவணங்களை எடுததுச் சென்றனர். அவர்களை போலீசார் தடுக்கவில்லை. 400க்கும் மேற்பட்டோர் அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை, என தெரிவித்தனர்.
இதனிடையே, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.