தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசாதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரம் ரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்கள் சந்தித்த சிவி சண்முகம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும், தமிழக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசவில்லை, என குற்றச்சாட்டினார்.
போதை பொருள் கடத்தலில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதால் முதல்வர் பேச மறுக்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது என்றும், சிந்தடிக் டிரக்ஸ் உலக நாடுகளில் கிடைக்கக்கூடிய போதைப்பொருட்கள் எல்லாம் தமிழகத்தில் சாதாரணமாக கிடைக்கிறது எனவும், ஏன் இதற்கு முதல்வர் பதில் சொல்ல மறுக்கிறார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.