தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசாதது ஏன் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தவறியதாக கூறி, தமிழக அரசை கண்டித்து விழுப்புரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் தலைமையில் விழுப்புரம் ரயில் நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம் வரை இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்கள் சந்தித்த சிவி சண்முகம் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் உள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் சுட்டிக்காட்டி வருவதாகவும், தமிழக அரசு அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். தமிழகத்தில் போதை பொருள் விற்பனை குறித்து முதல்வர் இதுவரை மறுத்து பேசவில்லை, என குற்றச்சாட்டினார்.
போதை பொருள் கடத்தலில் திமுகவினர் சம்பந்தப்பட்டிருப்பதால் முதல்வர் பேச மறுக்கிறாரா என சந்தேகம் எழுந்துள்ளது என்றும், சிந்தடிக் டிரக்ஸ் உலக நாடுகளில் கிடைக்கக்கூடிய போதைப்பொருட்கள் எல்லாம் தமிழகத்தில் சாதாரணமாக கிடைக்கிறது எனவும், ஏன் இதற்கு முதல்வர் பதில் சொல்ல மறுக்கிறார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.