அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி செய்த ஊழலுக்கு அதிமுக பொறுப்பேற்காது என்று அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதுபோல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிக்கையில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர் : அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்த ஊழலுக்கு அதிமுக பொறுப்பேற்குமா என கேள்வி எழுப்பினார்.
தமிழ் மகன் உசேன் : அதிமுக நிச்சயமாக பொறுப்பேற்காது. செந்தில் பாலாஜி தான் பொறுப்பேற்க வேண்டும். அதிமுக காலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்ததாக கேள்விப்பட்ட உடனே, அப்போதைய முதலமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறிந்தார்.
குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட ஒருவரை நள்ளிரவில் சந்தித்து நலம் விசாரிப்பது முறைதானா? சரக்கு இது சரிதானா வேலை தானா என எண்ணி பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி ஊழல் செய்தார் என தெரிந்தவுடன் அதிமுகவினர் யாரும் அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி கொள்ளைக்காரன் என்று பல கூட்டங்களில் பேசிய நிலையில், தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்து உள்ளார் ஸ்டாலின்.
செய்தியாளர் : நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விக்கு, அது நடிகர் விஜயின் செயல்பாடு என பதிலளித்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.