அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும், சேர்ந்தாலும் பாதிப்பு இல்லை.. வெற்றி பெறுவது திமுகதான் : அடித்து சொல்லும் உதயநிதி!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும், சேர்ந்தாலும் பாதிப்பு இல்லை.. வெற்றி பெறுவது திமுகதான் : அடித்து சொல்லும் உதயநிதி!!

கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் இன்று கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர் தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் காலங்களில் மட்டும் தான் மாநாடு நடத்துவது வழக்கம் அப்படி தான் தற்போது திமுக இளைஞரணி மாநாடு வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஆனால் இம்முறை இளைஞர் அணி மாநாடு நடத்த தலைவர் அனுமதி வழங்கி உள்ளார்.

சேலம் இளைஞர் அணி மாநாடு வெற்றி பெற அனைவரும் பெரும் திரளாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டும், நமது தலைவர் அரசியலில் படிப்படியாக உயர்ந்து, இளைஞர் அணி அமைப்பாளர், மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர், பதவிகளில் இருந்து மிசா காலங்களில் சிறை தண்டனை பெற்று படிப்படியாக உயர்ந்தவர்.

அப்படி திமுகவில் உழைக்கும் அனைவருக்கும் நிச்சயம் வெற்றி பெறலாம், திமுகவில் முதன்மை அணியாக இளைஞர் அணி உள்ளது. யாராக இருந்தாலும் கடுமையாக உழைத்தால் திமுகவில் முன்னேறலாம்.

நாம் திமுக இளைஞரணி மாநாடு நடத்துகிறோம், அண்மையில் மதுரையில் அதிமுக மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் என்ன முடிவு எடுக்கப்பட்டது. அடுத்த நாள் நாளிதழில் பார்த்தால் மாநாட்டில் புளி சாதமும், சாம்பார் சாதமும், நன்றாக இருந்ததா? என்பது தான் இடம் பெற்றிருந்தது.

ஆனால் திமுக மாநாடு வெற்றி மாநாடாக அமைய வேண்டும், மதுரை அதிமுக மாநாடு நடந்தபோது, அதே நாளில் திமுக சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரி இளைஞரணி சார்பில் போராட்டம் நடந்தது.

நான் பலமுறை கேட்டேன் அதிமுக மாநாட்டில் நீட் தேர்வு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினேன். ஆனால் அதிமுகவினர் நீட் தேர்வுக்கு எதிரான எந்த ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை,

இன்றைக்கு திமுக அரசின் திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் திமுக அரசை விமர்சனம் செய்கிறார்.

நான் பிரதமர் மோடியை கேட்கிறேன் அனைவரின் வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என சொன்னார் செய்தாரா? பிரதமர் மோடி சொன்னதை ஒன்றே மட்டும் தான் செய்துள்ளார், ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் செய்துள்ளார், இந்தியா என்பதை பாரத் என தற்போது பெயர் மாற்றம் செய்துள்ளார்.

இன்றைக்கு சிஏஜி அறிக்கையில் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறது. இறந்தவர்களின் பெயரில் காப்பீடு திட்டத்தில் முறைகேடாக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கடந்த 9 ஆண்டுகளில் பயன் பெற்றது அதானி குடும்பம் மட்டுமே.

அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளார். அதிமுக பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் சரி, வைக்காவிட்டாலும் சரி, தேர்தல்களில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது.

மக்களை ஏமாற்ற முடியாது அதிமுகவின் தலைவர்கள் மீதும், அமைச்சர்கள் மீதும், பல்வேறு இ.டி. வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் தற்போது கூட்டணி இல்லை என்பார்கள், பிறகு தேர்தல் நேரத்தில் ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள், எனவே தமிழகத்தில் அதிமுக என்கிற இயக்கத்தை கட்சியை முழுமையாக அகற்ற இளைஞர்கள் ஒன்று திரண்டு வரவேண்டும் என பேசினார்.

இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் மதியழகன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

10 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

12 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

12 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

12 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

13 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

14 hours ago

This website uses cookies.