நவம்பர் 6 அன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகை தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இன்று (நவ.1) வெளியிடப்பட்டு உள்ள அறிக்கை வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி தலைமையில், கட்சித் தலைமையின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த, மாநிலச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற மாநிலச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, வருகிற நவம்பர் 6ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது, பொதுக்குழு கூட்டுவது, 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!
தற்போது, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் உடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக, 2026 தேர்தல் களத்தை யாருடன் இணைந்து எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்தும், இக்கூட்டத்தில் கருத்துக்கள் கேட்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு மாவட்டங்களில் எப்படி உள்ளது என்பது குறித்தும் இதில் கருத்துகள் பகிரப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.