மதுரை மத்திய மந்திரி எல்.முருகன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்ககளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை கடற்படைக்கும், தமிழக மீனவர்கள் இடையே உள்ள பிரச்சினைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுகிறார்கள் அப்போது தலையிட்டு நமது வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கிறார். படகுகள் விவகாரத்தில் கடந்த மாதம் 3 விசைப்படகுகளை விடுவித்திருக்கிறோம
மேலும் உள்ள விசைப்படகுகளை மீட்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழக படகுகளை விடுவிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. மீனவர்களுக்கு குரூப் இன்சூரன்ஸ் திட்டம் இருக்கிறது. சேதமடைந்த படகுகளுக்கும் இன்சூரன்ஸ் இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராகுல் காந்தி பிரச்சினையை பொறுத்தவரை காழ்ப்புணர்ச்சி இல்லை. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதா-அ.தி.மு.க.வில் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
This website uses cookies.