முன்னாள் அமைச்சர் கக்கனின் 116வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் அல்லாத நபர்கள் கூட கக்கனை பற்றி பேசினால் மெய் மறந்து கண்கள் லேசாக கலங்கும் வகையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் என குறிப்பிட்டார்.
தமிழக பாரதிய ஜனதா தொடர்ச்சியாக இழிவான செய்திகளை செய்து வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷனை பாஜக நிர்வாகி சூர்யா என்பவர் மிகவும் கீழ்த்தரமாக பேசி உள்ளார். பாரதிய ஜனதா கட்சியில் கீழ்த்தரமாக பேசுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார். இழிவான பேசுபவர்களுக்கு எப்படி ஒரு அரசியல் கட்சி ஆதரவளிக்கிறது என கேள்வி எழுப்பினார். தமிழக பாரதிய ஜனதாவையும் இழிவான பதிவுகளை பதிவிடுபவர்களையும் கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்து வருவதாக குறிப்பிட்டவர், அந்த அரசியலை எப்படி எதிர்கொள்வது என்பது எங்களுக்கு தெரியும். எங்களுடைய கேள்வி இரண்டு தான், நள்ளிரவில் ஒரு அமைச்சரை எப்படி கைது செய்யலாம், சாட்சியும் இல்லாம எப்படி கைது செய்யலாம். சமூகவிரோதியை போல் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது குற்றம் இருப்பதாக கருதினால் விசாரணைக்கு அழைத்து வந்து விசாரணை செய்யலாம். அவர் குற்றம் செய்திருந்தால் அவரை தண்டியுங்கள்.
அதிமுக அமைச்சர்கள் குற்றம் செய்த போது தமிழக காவல்துறை விசாரணை நடத்தி அமலாக்கதுறையிடம் அறிவித்தபோதும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. டெல்லியில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்கள் பெற்றவர்கள் பெண் சமூகத்திற்கு மரியாதை ஏற்படுத்தியவர்கள் அனைத்து விளையாட்டு வீராங்கனையும் பாரதிய ஜனதா உறுப்பினர் மீது பாலியல் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் அந்த பாலியல் குற்றத்திற்காக அவரை விசாரணை செய்தீர்களா என கேள்வி எழுப்பினார்.
பாரதிய ஜனதாவினருக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்வி எழுப்பியவர், நாயை அழைத்து செல்வது போல் அழைத்து சென்றுள்ளீர்கள். மக்கள் செல்வாக்கு உடையவரை உங்கள் லட்சியத்திற்கு எதிராக இருப்பவர்களை இழிவு செய்யும் வகையில் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். இரண்டு நாட்களில் இரண்டு தோல்விகளை ஆளுநர் சந்தித்துள்ளதாக கூறியவர், ஆளுநர் வெறும் ‘காகிதப்புலி’ மட்டுமே, ஒரு ஆளுநர் பரிதாபம் அடையும் வகையில் இப்படி தோல்வி அடையக் கூடாது என விமர்சித்தார்.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கக் கூடாதா என கேள்வி எழுப்பியவர், குற்றம் சுமத்தப்பட்டாலே அவர் குற்றவாளி கருத முடியாது. அமித்ஷா சிறையில் இருந்த போதே அமைச்சராக இருந்தார் அமித்ஷாவிற்கு மட்டும் புதிய சட்டம் எழுதி இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.