‘எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தி…அவர் பெயரை கெடுக்கவே இந்த ரெய்டு’: எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் பேட்டி..!!

கோவை: எஸ்.பி.வேலுமணி மிகப்பெரிய சக்தியாக இருப்பதால் அதை உடைக்க இது போன்ற சோதனைகளை செய்து வருவதாக கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடையவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அவரது வீட்டின் முன்பு ஏராளமான அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். பெண்கள் பலர் எஸ்.பி.வேலுமணி வீட்டு வாசலிலேயே அமர்ந்துள்ளனர்.

இதனிடையே எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பொள்ளாச்சி ஜெயராமன், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகியோரும் அங்கு திரண்டுள்ளனர். தொடர்ந்து எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். திமுக பெற்ற வெற்றி உண்மையான வெற்றி அல்ல.

கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தெரியும். அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.சாதாரண தொண்டர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்கின்றனர்.

இதனால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். விழுந்து விட மாட்டோம். அ.தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள் தான் வீழ்ந்து போவார்கள். 9 அதிகாரிகள் இவ்வளவு நேரம் சோதனை நடத்த என்ன இருக்கிறது. 3 மாதங்களுக்கு முன்பு தான் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் சோதனை செய்ய அவசியம் என்ன? திமுக தானே ஆட்சியில் உள்ளது. எப்படி தவறு செய்ய முடியும்.

தற்போது வரை சோதனையில் எந்த ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

28 minutes ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

1 hour ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

1 hour ago

ராமதாஸ் முடிவுக்கு எதிராக போர்க்கொடி.. அன்புமணிக்கு ஆதரவாக எழுந்த முதல் குரல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…

2 hours ago

பூப்படைந்த பட்டியலின மாணவிக்கு தனியார் பள்ளியில் அரங்கேறிய அவலம்.. அதிர்ச்சி வீடியோ!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…

3 hours ago

கோவைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… ஜெயிலர் 2 குறித்து முக்கிய அப்டேட்!

ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…

3 hours ago

This website uses cookies.