கேரளாவில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா; உஷாரான தமிழக அரசு

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வலைதள பக்கத்தில் கேரளமாநிலத்தில் நெக்லேரியா ஃபோலேரி என்னும் அமீபா பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிர் இழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இத்தகைய பரவல்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

அசுத்தமான நீரில் பரவும் இந்த நோய் குழந்தைகளை அதிகம் அச்சுறுத்துவதால் மக்களின் உயிர் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவு செய்தார்.

கேரளாவில் மூளையைத் தின்னும் நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீபாவால் அமீபிக் மெனிங்கோ என்சபாலிடிஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து தமிழக அரசு இந்த நோய்க்கான சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அவர்களுக்கும் நோய் குறித்து கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.


நெக்லேரியா ஃபோலேரி என்று மூளையை தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சுகாதார வழிகாட்டுதல் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் மற்றும் நீர்நிலைகள் குளங்கள் ஏரிகளின் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

மூளையை தின்னும் தொற்றுநோய் உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி,காய்ச்சல்,குமட்டல் வாந்தி குழப்பம் பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை நோயின் அறிகுறிகள் ஆகும் எனவே மக்களும் முன்னெச்சரிக்கையுடன் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Sudha

Recent Posts

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

17 minutes ago

நயன்தாரா இப்படிலாம் செய்வாங்கனு எதிர்பார்க்கல- உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…

20 minutes ago

கணவர் வீட்டை விட்டு போக முடியாது : புதுச்சேரியை விட்டு செல்ல மறுக்கும் பாக்., பெண்!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…

46 minutes ago

தேர்தல் நேரத்தில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.. திமுக எம்பிக்கு கோர்ட் பரபர உத்தரவு!

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…

1 hour ago

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…

2 hours ago

இளையராஜா செஞ்சது சரியா?- கெத்து தினேஷுக்கு இவ்வளவு கெத்தா? என்னப்பா இது?

இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…

2 hours ago

This website uses cookies.