6 மாதமாக 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. அண்ணன் முறை உறவினரான 16 வயது சிறுவனின் கோரம்.. 3 பேர் அரங்கேற்றிய கொடூரம்!

சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் துடித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உறவுக்கார பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில், 11 வயது சிறுமிக்கு உறவுக்கார சிறுவன், அவனது நண்பன் உட்பட மேலும் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுபோதைக்கு அடிமையான சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை சரிவர கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க: வீட்டு வேலை செய்ய துபாய் சென்ற பெண்ணுக்கு துன்புறுத்தல்.. மனைவியை மீட்க கோரி மகனுடன் மனு அளித்த கணவன்!

சிறுமியை பார்க்க வந்த உறவுக்கார பெண் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சுமார் 6 மாத காலம் தொடர்ந்து இந்த கொடூரம் நிகழ்ந்ததும் பின்னர் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, சென்னை வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து போக்ஸோ வழக்கு பதிவு செய்த வில்லிவாக்கம் போலீசார், முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள குமார் எனும் டெய்லரை கைது செய்தனர்.

அதன்பின்னர், மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் பெரியப்பா மகன் 16 வயது சிறுவனும்,அவனது நண்பனும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது போக்ஸோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

4 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

5 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

5 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

5 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

5 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

6 hours ago

This website uses cookies.