விழுப்புரம் அருகே உள்ள ஆசிரம விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
குண்டலபுலியூர் கிராமத்தில் அமைந்துள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த ஆசரமத்தில் பல்வேறு முறைகேடுகளும், சட்டவிரோத செயல்களும் நடந்து வருவதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரமம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டது தெரியவந்தது. இங்கு பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதுமட்டுமில்லாமல், அங்கிருப்பவர்களின் உடல் உறுப்புகளும் திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், விழுப்புரம் அருகே உள்ள ஆசிரம விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின் தவிர, அவரது மனைவி மரியா ஜீபின் உட்பட 8 பேரை கெடார் போலீசார் கைது செய்தனர். இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், ”திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எதிர்பாராதவிதமாக பணியில் இருந்த ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த விவகாரம் நாளிதழில் தலைப்புச் செய்தியாக வந்த பிறகுதான் மாநில காவல்துறை குற்றத்தில் ஈடுபட்ட திமுக செயலாளரை கைது செய்தது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் ஜூபின் பேபி மற்றும் அவரது மனைவி மரியா ஆகியோரால் அன்பு ஜோதி ஆசிரமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் இளம் குழந்தைகள், நடுத்தர வயதுடைய ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரை சட்டவிரோத காவலில் வைத்தல், சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் சந்தேகத்திற்குரிய மாநிலங்களுக்கு இடையேயான மனித கடத்தல் ஆகியவற்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்பான விரிவான கட்டுரை இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், கெடார் காவல் நிலையத்தில் ஹாலிதீன் என்பவர் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக புகார் அளித்தார். இதனையடுத்து, நடந்த விசாரணையில் ஆசிரமத்தில் இருந்த 52 பேர் பெங்களூரில் உள்ள ஆசிரமத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கேயும் அவர்களை காணவில்லை. மேலும் 14 கைதிகளும், ஜபருல்லாவும் ஆசிரமத்தில் இருந்து தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் விசாரணையின் போது இறந்த உடல்களை அடக்கம் செய்ய ஆசிரமத்திற்கு அங்கீகாரம் அளித்ததாக காவல்துறையின் போலி கடிதங்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கர்நாடகா மற்றும் ராஜஸ்தானில் இந்த கடத்தல் நெட்வொர்க்குக்கு இணைப்புகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தம்பதியினர் 2005 ஆம் ஆண்டு முதல் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகின்றனர். துரதிர்ஷ்டவசமாக இத்தகைய சட்டவிரோத செயல்பாடு இத்தனை ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்துள்ளது.
2021 ஆம் ஆண்டில், விழுப்புரத்தில் உள்ள ஆசிரமத்திலிருந்து மாற்றப்பட்ட 15 கைதிகள் பெங்களூரு கேஆர்சி ரோடு தொட்டகுப்பியில் உள்ள ARK மிஷன் ஆஃப் இந்தியாவுக்கு மாற்றப்பட்டனர். இந்த இடமாற்றங்கள் மற்றும் பல சந்தர்ப்பங்களில் இறப்புக்கான உண்மையான பதிவுகள் எதுவும் பராமரிக்கப்படாததால், இது உறுப்பு கடத்தல் என்று சந்தேகிக்கப்படும் வழக்காக உள்ளது.
சமீபத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜஸ்தானில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வட இந்தியாவைச் சேர்ந்த 160 ஆதரவற்ற நபர்களை அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் சந்திக்க ஏற்பாடு செய்தார். இந்த வகையில் அன்பு ஜோதி ஆசிரமம் தமிழ்நாட்டிலிருந்து இடமாற்றத்தை எளிதாக்கியது என்று நம்பப்படுகிறது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இந்த ஆசிரமத்தில் மனித கடத்தல் மற்றும் உறுப்பு கடத்தல் தொடர்பான சந்தேகத்திற்குரிய வழக்கு தவிர, பல தசாப்தங்களாக பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.இந்த வழக்கை தமிழக டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார்.
ஆனால் இந்த வழக்கு 3 மாநிலங்களை உள்ளடக்கியதாக இருப்பதால், சட்டப்பூர்வ மாற்றத்தை கருத்தில் கொண்டு, தயவுசெய்து சிபிஐ நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும், இந்த மனித கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.