மதுரை ; தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு செயல்படுவதாக மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெறும் கட்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார்.
அப்போது செய்திகளை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர் பிரச்சினையாக உள்ளது. காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். கடந்த ஆண்டு வீணாக 640 DMC தண்ணீர் கடலுக்கு செல்லும் நீரை திருப்பி விட வேண்டும். காவிரி குண்டாறு இணைப்பில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும்.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆற்று இணைப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் மணல் மாஃபியா கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரான்சிஸ் அவர்கள் வழக்கை முறைப்படுத்தி விசாரணை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும்.
மேலும், மணல் நமது பொக்கிஷம். அதனை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்ட 15 திருமாங்கலில் திருமண மண்டபம் விளையாட்டு திடல் போன்றவற்றில் மதுபான கடைகள் திறக்க அனுமதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை அரசு தடுக்க வேண்டும்.
தொடர்ந்து, 12 மணிநேர வேலை என்பது மிகவும் கடினமானது. 12 மணி நேர வேலை, ஆறு மணி நேரம் தூக்கம், 2 மணி நேரம் போக்குவரத்து செலவு என செய்தால் குடும்பத்தை பார்ப்பது எப்படி. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக 100 கோடி, 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்கள் வைத்திருப்பவர்கள், நீர்நிலை நீர்நிலைகளை தானாகவே பராமரித்துக் கொள்ளலாம் என கூறி உள்ளது. தனியார்களுக்கு சாதகமான மசோதா, இதனை அரசு நீக்க வேண்டும்.
அரசு மக்களுக்கான அரசாக இல்லாமல் தனியாருக்கான அரசாக உள்ளது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். அண்ணாவின் நிலைப்பாட்டை அரசு உறுதி செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் கூட்டணி குறித்து 2024 இல் முடிவு செய்யப்படும்
2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் அமைப்போம், என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.