தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றவாளி யார் என்பது தெளிவாக கூறவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை ; தமிழகத்தில் அனைத்து பாடப்பிரிவுகளும் பயிற்றுமொழி தமிழ் என தமிழக அரசு அறிவித்தால் வரவேற்கிறோம். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எந்தவித புது தகவலும் இல்லை.
அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது பழிசுமத்துவது தவறானது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் அறிக்கையில் ஆசையை தூண்டும் விதமாகவே உள்ளதே தவிர தெளிவாக இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது கல்லெறிந்தவர்கள் எல்லோரும் சமூக விரோதிகள் தான்.
பொது சொத்துகளுக்கு சேதாரம் விளைவிப்பவர்கள் எல்லோரும் எங்கள் அகராதியில் சமூக விரோதிகள் தான். துப்பாக்கிச்சூடு நடத்தியது தவறு என்று சொல்லவில்லை ; துப்பாக்கிச்சூடு நடந்த விதம் தவறானது. சுட்டவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் ; ஆனால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல.
அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி இருக்கிறார் என்று கூறுவது முற்றிலும் தவறானது. அருணா ஜெகதீசனின் ஆணைய அறிக்கையில் ரஜினிகாந்தின் கருத்தை பற்றி கூறியதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது, எனக் கூறினார்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.