தமிழக அரசு நடத்தும் கார் பந்தயத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பு? திமுகவுடன் பாஜக ரகசிய கூட்டணி : சி.வி. சண்முகம் பகீர்!!

தமிழக அரசு நடத்தும் கார் பந்தயத்தில் அண்ணாமலைக்கும் தொடர்பு? திமுகவுடன் பாஜக ரகசிய கூட்டணி : சிவி சண்முகம் பகீர்!!

விழுப்புரம் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் சென்னை மாநகரம் வரலாறு காணாத மழையினால் தத்தளித்து கொண்டிருப்பதாகவும் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் பணி நடைபெற்று கொண்டிருக்க நிலையில் இன்னும் மூன்று கிலோ மீட்டர் மட்டுமே பணிகள் நிறைவடைய உள்ளதாக தெரிவித்த நிலையில் சென்னை மழையினால் தத்தளிப்பதாகவும் சாலைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் மழை நீர் தேங்கியுள்ளதாக கூறினார்.

மழை நீரை பாதிப்பினை கவனிக்க வேண்டிய முதலமைச்சரும் அமைச்சரும் இன்றைக்கு 8 ஆம் தேதி கார்பந்தய போட்டி நடத்துவதற்காக கவனம் செலுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

கார்பந்தயத்திற்காக 242 கோடி ரூபாய்க்கு செலவு செய்து திமுக அரசு கார் பந்தயம் நடத்துவதாகவும் இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் மற்ற கட்சியினர் மெளனம் காத்து வருவதாக கூறினார்.

இதில் பாஜகவிற்கு திமுகவிற்கும் ரகசிய உறவு உள்ளதால் இது தொடர்பாக அண்ணாமலை வாய்திறக்காமல் உள்ளதாகவும், கார்பந்தயத்திற்காக மத்திய அரசு சார்பில் 24 மணி நேரத்திற்குள் அனுமதி வழங்கபட்டுள்ளதாகவும் திமுக அரசு ஒரு விளம்பர அரசாக உள்ளதாக தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தொட்டியில் மலம் கலந்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் அம்மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் மறைத்துள்ளதாகவும், நீலகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை ஆனதையடுத்து சிறுமிக்கு கைவிலங்கு போட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற அவல நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

கார்பந்தயத்திற்காக தமிழக அரசு 242 கோடி செலவு செய்துள்ளது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஆவினில் மேஜிக் பாலை நிறுத்திவிட்டு சொகுசு வாழ்க்கையை தமிழக அரசு நடத்தி உள்ளதாகவும் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை மத்திய அரசாங்கத்தில் பணியாற்றுகின்றவர்கள் தாக்கபடுகின்ற சம்பவமும் இங்கு நடைபெறுவதாக தெரிவித்தார்.

அமலாக்க துறையின் மூலமாக தமிழகத்தில் மணல் குவாரியில் ஊழல் நடைபெற்று கொண்டிருப்பதை வெளிகொண்டு வந்து மணல் கொள்ளையில் 420 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருப்பதை வெளி கொண்டு வந்துள்ளதற்கு நீதிமன்றமே பாராட்டு தெரிவித்துள்ளதாகவும், அமலாக்க துறை அதிகாரி லஞ்சம் பெற்றுருப்பதாக தெரிவிப்பது அதிகாரி குற்றம் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் இரவில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதால் சந்தேகம் எழுவதாக கூறினார்.

மணல் குவாரியில் முறைகேடு நடைபெற்று இருப்பது குறித்து அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிற நிலையில் எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை ஊழல் நடைப்பெற்றது என்பது குறித்து அமலாக்க துறையினர் கணக்கெடுப்பதை பொறுத்தே தெரியும் அது அதிமுக ஆட்சியில் மணல் எடுக்கப்பட்டது குறித்து கணக்கெடுத்து விசாரனை செய்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளதாகவும் தமிழகத்தில் மெச்சூரிட்டி இல்லாத ஒரே அரசியல் வாதி பாஜக தலைவர் அண்னணாமலை தான் பகிரங்கமாக தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

24 minutes ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

1 hour ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

2 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

3 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

5 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

6 hours ago

This website uses cookies.