அண்ணாமலை ஒரு FRAUD.. தமிழர்களை தீவிரவாதி என கூறிய பாஜக எம்பியை ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை!

அண்ணாமலை ஒரு FRAUD.. தமிழர்களை தீவிரவாதி என கூறிய பாஜக எம்பியை ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை!

வேலூர் மாநகர் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

காங்கிரஸ் கட்சி 57 ஆண்டு காலம் ஆட்சி இழந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி, காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு மக்களோடு மக்களாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை கோட்பாடு காங்கிரஸ் கட்சி என்னென்ன சட்டங்கள் திட்டங்கள்கொண்டு வந்துள்ளது என்பதை மக்களிடம் சென்று சேர்க்க உள்ளோம்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் கொலையா தற்கொலையா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு

தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது அது முழுக்க முழுக்க கொலைதான்.அவர் இறந்ததை பார்க்கும் பொழுது அதை தற்கொலை தான் என்று சொல்ல முடியாது. அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்பதால் ஐ.ஜி அதை கொலையா தற்கொலையா என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்னும் உடற்கூறு ஆய்வு முழுவதுமாக கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவருடைய விசாரணையில் அவர் அப்படி கூறி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பார்வையில் அது கொலைதான்.

சபாநாயகர் அப்பாவுவை தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு

தற்பொழுது புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதில் நாம் தலையிட கூடாது. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அதை விசாரணை கேட்க குந்தகம் ஏற்படும். எங்களைப் பொறுத்தவரை அது தற்கொலை இல்லை.

ஜெயக்குமார் கொலை வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி இல்லை என்றால் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கேட்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு?

காவல்துறையில் இதுவரை 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது புலன் விசாரணை நடைபெறும் பொழுது அதில் நாம் தலையிடக்கூடாது. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது ஒரு தெளிவு வரும் முழுமையான உடற்கூறு ஆய்வு வந்த பிறகு காவல்துறையினர் தெரிவிப்பார்கள். விசாரணை முடிந்த பிறகு இது தொடர்பாக பதிலளிக்கிறேன்.

மேலும் படிக்க: ஏன்டா படுபாவி.. நீ ஜெயிலுக்கு போயும் திருந்தலயா? ஆபாச பேச்சு பேசிய திமுக பேச்சாளர்.. ராதிகா ஆவேசம்!

இந்தியா முழுவதும் ஒரு சதவீதம் கூட காங்கிரஸ் கட்சி வளர்ச்சி இல்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு?

ஏமாற்றுகிறார்கள் தகுதி இல்லாதவர்களும் அப்படி தான் கூறுவார்கள். நாடு விடுதலை அடைந்த போது ஒரு குண்டு ஊசி கூட தயாரிக்க கூடிய அளவில் இந்தியா இல்லை. ஜவஹர்லால் நேரு வந்த பிறகு நாட்டில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாஜக கடந்த பத்து ஆண்டுகளில் என்ன செய்தது என செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பினார். உண்மைக்கு புறம்பாக பேசுவது தான் பாஜகவின் வேலை. தமிழர்களை தீவிரவாதிகள் என கர்நாடக எம் பி கூறியிருக்கிறாரே அதற்கு முதலில் அண்ணாமலை ஒரு கண்டன மாவது தெரிவித்தாரா?. ஆர்எஸ்எஸ் கைக்கூலி தான் அண்ணாமலை. அண்ணாமலை ஒரு பிராடு காங்கிரஸ் பற்றி பேச பாஜகவுக்கு அருகதையில்லை. தேசத்திற்காக விவாதம் நடத்த ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் மோடி ஏன் இதுவரை வாய்திறக்கவில்லை.

உடுமலையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

உடுமலை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களை காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் குறிப்பாக உளவுத்துறைகள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்ற பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குற்றமில்லாத தமிழ்நாடு என்பதை காவல்துறை ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.

கஞ்சா போதை பொருட்கள் ஆப்கானிஸில் இருந்து மத்திய அரசின் பல்வேறு காவல்துறை கட்டுப்பாட்டை மீறி தமிழகத்தில் வருகிறது. மத்திய அரசின் பல்வேறு உளவுத்துறை ,பாதுகாப்பு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இதனை அனுமதிப்பது பாஜகவை சார்ந்தவர்கள் தான் எங்களுடைய கொள்கை தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். என்று செல்வ பெருந்தகை கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

திருமணம் ஆகாமலேயே விஜய் பட நடிகை கர்ப்பம்… வைலராகும் போட்டோஸ்!!

சினிமா பிரபலங்கள் திருமணம் செய்யாமல் கர்ப்பமான நிகழ்வுகள் அன்றைய காலம் தொட்டே வாடிக்கையாக இருந்தன. நடிகை ஸ்ரீதேவியை குறிப்பிட்டு சொல்லலாம்.…

30 minutes ago

டிவிட்டர் கணக்கை திருடிட்டாங்க; எல்லாமே போச்சு- குஷ்புவுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

டிரெண்டிங் நடிகை நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டிரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் நேற்று முழுவதும் குஷ்பு இணையத்தில்…

41 minutes ago

ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…

ரசிகர்களுக்கான அஜித் படம் கடந்த 10 ஆம் தேதி அஜித்குமாரின் “குட் பேட் அக்லி” திரைப்படம் வெளிவந்த நிலையில் அஜித்…

1 hour ago

வெள்ளியங்கிரி மலைக்கு ஆசை ஆசையாக வந்த தூத்துக்குடி இளைஞர்..படி இறங்கும் போது சோகம்!

தென் கைலாயம் என பக்தர்களால் போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு ஏழு மலையலை கடந்து சென்று சாமி தரிசனம்…

2 hours ago

துரை வைகோ விலகல்.. பின்னணியில் மல்லை சத்யா? அதிர்ச்சியில் வைகோ!

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து துரை வைகோ விலகியது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி எம்பியாக உள்ள…

2 hours ago

பொது வெளியில் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்; ஒருத்தரை இப்படியா அவமானப்படுத்தனும்? அடப்பாவமே

விண்வெளி நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் விண்வெளி நாயகன் என்று அவரை இப்போது…

2 hours ago

This website uses cookies.