அண்ணாமலை ஒரு FRAUD.. தமிழர்களை தீவிரவாதி என கூறிய பாஜக எம்பியை ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை!

அண்ணாமலை ஒரு FRAUD.. தமிழர்களை தீவிரவாதி என கூறிய பாஜக எம்பியை ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை!

வேலூர் மாநகர் மற்றும் மத்திய மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

காங்கிரஸ் கட்சி 57 ஆண்டு காலம் ஆட்சி இழந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி, காமராஜர் ஆட்சி அமைப்பதற்கு மக்களோடு மக்களாக காங்கிரஸ் கட்சியின் கொள்கை கோட்பாடு காங்கிரஸ் கட்சி என்னென்ன சட்டங்கள் திட்டங்கள்கொண்டு வந்துள்ளது என்பதை மக்களிடம் சென்று சேர்க்க உள்ளோம்.

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் கொலையா தற்கொலையா என்பதை முடிவு செய்ய முடியவில்லை என ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு

தற்பொழுது கிடைத்துள்ள தகவல்களைப் பார்க்கும்போது அது முழுக்க முழுக்க கொலைதான்.அவர் இறந்ததை பார்க்கும் பொழுது அதை தற்கொலை தான் என்று சொல்ல முடியாது. அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை என்பதால் ஐ.ஜி அதை கொலையா தற்கொலையா என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக இன்னும் உடற்கூறு ஆய்வு முழுவதுமாக கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். அவருடைய விசாரணையில் அவர் அப்படி கூறி இருக்கலாம். ஆனால் பொதுமக்கள் பார்வையில் அது கொலைதான்.

சபாநாயகர் அப்பாவுவை தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என செய்தியாளர்கள் கேட்டதற்கு

தற்பொழுது புலன் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அதில் நாம் தலையிட கூடாது. அப்படி ஏதாவது தகவல் தெரிவித்தால் அதை விசாரணை கேட்க குந்தகம் ஏற்படும். எங்களைப் பொறுத்தவரை அது தற்கொலை இல்லை.

ஜெயக்குமார் கொலை வழக்கில் தமிழக காவல்துறையின் விசாரணை திருப்தி இல்லை என்றால் சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணை கேட்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு?

காவல்துறையில் இதுவரை 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது புலன் விசாரணை நடைபெறும் பொழுது அதில் நாம் தலையிடக்கூடாது. தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது ஒரு தெளிவு வரும் முழுமையான உடற்கூறு ஆய்வு வந்த பிறகு காவல்துறையினர் தெரிவிப்பார்கள். விசாரணை முடிந்த பிறகு இது தொடர்பாக பதிலளிக்கிறேன்.

மேலும் படிக்க: ஏன்டா படுபாவி.. நீ ஜெயிலுக்கு போயும் திருந்தலயா? ஆபாச பேச்சு பேசிய திமுக பேச்சாளர்.. ராதிகா ஆவேசம்!

இந்தியா முழுவதும் ஒரு சதவீதம் கூட காங்கிரஸ் கட்சி வளர்ச்சி இல்லையென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு?

ஏமாற்றுகிறார்கள் தகுதி இல்லாதவர்களும் அப்படி தான் கூறுவார்கள். நாடு விடுதலை அடைந்த போது ஒரு குண்டு ஊசி கூட தயாரிக்க கூடிய அளவில் இந்தியா இல்லை. ஜவஹர்லால் நேரு வந்த பிறகு நாட்டில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் பாஜக கடந்த பத்து ஆண்டுகளில் என்ன செய்தது என செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பினார். உண்மைக்கு புறம்பாக பேசுவது தான் பாஜகவின் வேலை. தமிழர்களை தீவிரவாதிகள் என கர்நாடக எம் பி கூறியிருக்கிறாரே அதற்கு முதலில் அண்ணாமலை ஒரு கண்டன மாவது தெரிவித்தாரா?. ஆர்எஸ்எஸ் கைக்கூலி தான் அண்ணாமலை. அண்ணாமலை ஒரு பிராடு காங்கிரஸ் பற்றி பேச பாஜகவுக்கு அருகதையில்லை. தேசத்திற்காக விவாதம் நடத்த ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார் மோடி ஏன் இதுவரை வாய்திறக்கவில்லை.

உடுமலையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு

உடுமலை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்களை காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும் குறிப்பாக உளவுத்துறைகள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்ற பகுதிகளில் கண்காணிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குற்றமில்லாத தமிழ்நாடு என்பதை காவல்துறை ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.

கஞ்சா போதை பொருட்கள் ஆப்கானிஸில் இருந்து மத்திய அரசின் பல்வேறு காவல்துறை கட்டுப்பாட்டை மீறி தமிழகத்தில் வருகிறது. மத்திய அரசின் பல்வேறு உளவுத்துறை ,பாதுகாப்பு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. இதனை அனுமதிப்பது பாஜகவை சார்ந்தவர்கள் தான் எங்களுடைய கொள்கை தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பதுதான். என்று செல்வ பெருந்தகை கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

12 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

13 hours ago

This website uses cookies.