புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி அமுதசுரபியை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நஷ்டத்தில் இயங்கினாலும் சம்பளம் வழங்கி வந்தோம்.
ஆனால் தற்போது மத்திய மாநிலத்தில் ஒரே ஆட்சி உள்ளது. ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டுகின்ற ஒரு அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனரா?.
ஒட்டுமொத்தமாக நிதி பற்றாக்குறையால் இந்த அரசு சிக்கி தவிக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை புதுச்சேரியில் ஆளும் இந்த அரசில் உள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர் பாஜகவை சேர்ந்தவர் தான். கூட்டணி ஆட்சியில் இருப்பதால் முதலமைச்சர் ரங்கசாமி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவில்லை.
பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்ய வேண்டும். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனால் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பிரகாசமாக உள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அதை வேடிக்கை பார்த்தார். அவர் ஒரு தமிழின துரோகி என்று குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
This website uses cookies.