எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும். ஏற்கெனவே இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சி ஜெயித்திருந்தாலும் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் பாஜக இருக்கிறது.
ஏனெனில் 2025ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா வருகிறது. தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே சில மாநிலங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கிடைக்காமல் நீதிமன்றம் சென்றுதான் அனுமதி வாங்க முடிந்தது.
இதே அடுத்த ஆண்டு தேர்தலில் தோற்றுவிட்டால் நிச்சயம் இந்த பேரணியை நடத்த மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என்பதால் 2024ம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த தேர்தலில் பாஜக வென்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்று முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் எனும் பெருமையை மோடி பெறுவார். அந்த வகையிலும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வரும் விநாயகர் சதுர்த்தியன்று ஒவ்வொரு பூத்களிலும் பாஜக சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதன் மூலமாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மத்தியில் தங்கள் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது.
வழக்கமாக விநாயகர் சிலைகளை கரைக்க கொண்டு செல்ல இந்து முன்னணி போன்ற இந்துத்துவா அமைப்புகள்தான் முன்வரும். இந்த முறை அத்துடன் சேர்த்து பாஜகவே நேரடியாக களத்தில் இறங்க திட்டமிட்டிருக்கிறது.
அண்ணாமலையின் முதல்கட்ட யாத்திரை வரும் 22ம் தேதி முடிவடைகிறது. எனவே அதன் பின்னர் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.