ஆளுநர் ஆர்என் ரவி முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு? இலங்கை செல்லும் முன் பரபரப்பு கருத்து!!
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை செல்ல சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். சங்கரய்யாவுடன் வேறு யாருக்கேனும் டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரைத்து பட்டியல் அனுப்பப்பட்டத என்ற விவரம் தனக்குத் தெரியாது என ஆளுநர் மாளிகையை கோர்த்துவிட்டுள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் இன்னும் சாதிய வன்கொடுமைகள் நிகழ்வது தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் சாதிய வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு தீர்மானம் நிறைவேற்றி அதற்கு அனுமதி வழங்க கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைத்துள்ளது. ஆனால் ஆளுநர் ரவி அதற்கு இன்னும் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த முடிவை பாஜகவே ரசிக்கவில்லை என்பதை தான் அண்ணாமலை சூசகமாக தனது பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான சங்கரய்யா நூற்றாண்டுகளை கடந்து வாழக்கூடிய வரலாறாக திகழ்பவர்.
சங்கரய்யாவை ஆளுநர் அவமதிப்பு செய்துவிட்டதாக விமர்சனக்கணைகள் வீசப்படும் நிலையில், ஆளுநர் முடிவுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை போல் அண்ணாமலையின் பேட்டி அமைந்துள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.