அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் எதையோ மூடி மறைக்க முயற்சி நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.
அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தஞ்சையில் உள்ள உண்டு, உறைவிட பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். குடும்ப சூழ்நிலைக் காரணமாக 8ம் வகுப்பு முதல் அங்கேயே தங்கிதான் படித்து வந்தார். இப்படியிருக்கையில், அவரை மதம் மாறு விடுதி காப்பாளர் நெருக்கடி கொடுத்ததாகவும், இதனால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் கடந்த வாரம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனிடையே, மாணவிக்கு மதமாற்றம் நெருக்கடி கொடுத்ததாக எந்தப்புகாரும் வரவில்லை என்று தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும், தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும், மேலும், பல்வேறு அமைப்புகள் குற்றம்சாட்டும் மதமாற்ற குற்றச்சாட்டை, விசாரணையின் போது யாருமே சொல்லவில்லை என தெரிவித்தார்.
காவல்துறை மற்றும் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் பாஜக உள்ளிட்ட கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் எதையோ மூடி மறைக்க முயற்சி நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் கிளப்பியுள்ளார்.
மேடை நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சரிசமமாக அனைத்து உயிர்களும் ஒன்றுதான். ஒரு மரணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி பாஜக கிடையாது. எங்கள் டிஎன்ஏவிலும் அப்படியில்லை. பொத்தம் பொதுவாக ஏதம் பேசில்லை. அந்த மாணவி பேசிய வீடியோவை ஆதாரமாக கொண்டு, கம்பீரமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணை நடத்தி வருகிறது.
அந்த வீடியோவை பதிவு செய்த நபரை நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இப்படியிருக்கையில், காவல்துறையினரும், அமைச்சரும் மதமாற்றத் தொந்தரவு ஏதும் கொடுக்கவில்லை என்கின்றனர். அவ்வளவு அவசரம் என்ன வந்தது?. எதையோ மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள்,” எனக் கூறியுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.