கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து கள்ள சாராய உயிரிழப்புகள் குறித்தும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி புகார் மனு அளித்தார்.
இதுதொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அறிக்கை அளிக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
எப்படி டாஸ்மாக்கை குறைத்து அதே வருமானத்தை வேறு வழிகளில் கொண்டு வருவது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்க இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்திருக்கிறோம் என அண்ணாமலை அப்போது அறிவித்தார்.
இந்நிலையில் ஜூன் 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு பாஜக குழு சந்தித்து அறிக்கை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் நியமிக்கப்பட்ட குழுவில் கரு.நாகராஜன், விபி துரைசாமி, பொன்.பாலகணபதி, கார்த்தியாயினி, உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளனர்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை தடுப்பது குறித்தும், கள்ளச்சாராய விற்பனைக்கு காரணமானவர்கள் குறித்த விவரங்கள் பட்டியலையும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பனை, தென்னை கள் உற்பத்தியை அதிகரித்தால் டாஸ்மாக்கை விட அதிக லாபம் பெற முடியும் என்பதை வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலுன், டாஸ்மாக் மதுபானங்களில் முறைகேடு மற்றும் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் அம்சங்களும் அந்த அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.