அதிமுக- பாஜக இடையே கூட்டணி குறித்து அண்மைக்காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் பாஜகவை வளர்க்க தனித்து போட்டியிடுவதே சிறந்தது. ஒரு வேளை அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் நான் என் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிக்கு தொண்டனாக பணியாற்றுவேன் என அதிர்ச்சி தரும் விதமாக பேசியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை பேசியது குறித்து பாஜக மூத்த தலைவர்கள் சிலர் விமர்சித்தாலும் சிலர் அவருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டிருந்தனர்.
இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர்.
அவர் ஒரு விஷயத்தை பேசுகிறார் என்றால் யோசிக்காமல் பேச மாட்டார். அவர் பேசுவது டெல்லி தலைமைக்கும் தெரியாமல் இருக்காது. எனவே இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் குழம்பவும் வேண்டாம், மற்றவர்களை குழப்பவும் வேண்டாம். எல்லாவற்றையும் கட்சி பார்த்துக் கொள்ளும் என்பதே என் கருத்து. இவ்வாறு குஷ்பு தெரிவித்திருந்தார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.