அன்னபூரணி பட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகை நயன்தாரா மன்னிப்பு கோரினார்.
அன்னபரணி படத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக கூறி, அப்படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், நெட்பிளிக்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், அன்னபூரணி பட விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகை நயன்தாரா மன்னிப்பு கோரினார்.
இது தொடர்பாக ஜெய் ஸ்ரீ ராம் வாசகத்துடன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவது படக்குழுவின் நோக்கமல்ல. எங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக உணர்கிறோம். இந்த விவகாரத்தில் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னபூரணி படம் வெறும் வணிக நோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சித்தோம். கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நான், ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்கோ, படக்குழுவுக்கோ இல்லை.
நேர்மறையான எண்ணங்களை பரப்புவது ஒன்றே தனது திரைப்பயணத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சினிமாத்துறையினருக்கு இந்து மதத்தை அவமதிப்பதே வாடிக்கையாகி விட்டதாகவும், உங்களின் மன்னிப்பு தேவையில்லை என்று அதிமுக ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான கிஷோர் கே சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.