தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பு வழங்க முடியாத முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சிவந்தி ஆதித்தனாரின் 9 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழக ஆளுநர் மயிலாடுதுறையில் ஞான யாத்திரை தூங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் திமுகவை சார்ந்தவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொண்டர்கள் ஆளுநரின் வாகனம் மீது கல்லை எரிந்து, கருப்புக் கொடியை வீசியிருக்கிறார்.
தமிழக முதல்வரால் ஆளுநருக்கு கூட பாதுகாப்பு வழங்க முடியவில்லை எனவே முதல்வர் பதவி விலக வேண்டும் இல்லையென்றால் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கான பாதுகாப்பை பொருத்தவரையிலும் திமுக ஆட்சியில் இந்த 10 மாதங்கள்தான் மிக மோசமான மாதங்களாக இருக்கிறது, ஆளுநரை அவமதித்த விவகாரத்தில் மாநில முதலமைச்சர் கண்ணை கட்டிக் கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஆளுநருக்கு பாதுகாப்பு ஏன் சரியாக கொடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம் என கூறினார்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.