UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன்மூலம், நடைபாதை வியாபாரிகள், சிறு கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் வரை நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில், UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்க தேசிய பரிவர்த்தனை கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உங்கள் மொபைல் வாலட்டில் (Mobile Wallet) பணம் செலுத்தினால், அதற்கு 1.1% கட்டணம் வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படாது.
இந்தக் கட்டணம் துறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. வேளாண்மை, டெலிகாம் துறைகளுக்கு சற்று குறைவாக உள்ளது. மேலும், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களின் மூலம் UPI பயன்படுத்தி ஒரு நபர் மற்றொரு நபருக்கு பணம் அனுப்புவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், மாறாக, ஒரு நபர் மற்றொரு வியாபாரிக்கு பணம் அனுப்பும்போது மட்டுமே பணம் வசூலிக்கப்படும். அதாவது, ஒருவர் வியாபாரிகளுக்கு 2000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனைகளை செய்தால் மட்டுமே இந்த 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.