கோவையில் பாஜக பிரமுகரை கத்தியால் குத்திய பாஜகவினர்: 4 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!

கோவை: ராமநாதபுரத்தில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நெசவாளர் பிரிவு செயலாளாரை, தாக்கி கத்தியால் குத்திய பாஜக பிரமுகர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை D1 ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பிஜேபியின் நெசவாளர் பிரிவின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் ராமநாதபுரத்தில் உள்ள எனது ஸ்டுடியோவில் புகுந்து எங்கள் கட்சியை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்கியதாக நேற்று புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த புகாரில்…எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடைபெற போவதாலும் நான் அதில் எந்த பதவிக்கும் போட்டியிடக்கூடாது என்று, என்னை எங்கள் கட்சியை சேர்ந்த கார்த்திக் மற்றும் முத்துக்குட்டி என்பவர்கள் கடந்த மாதம் மார்ச் 30ஆம் தேதி மாலை நான்கு முப்பது மணி அளவில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள எனது ஸ்டுடியோவிற்கு வந்து மிரட்டினார்கள்.

அதற்கு நான் கட்சியில் பதவிக்கு போட்டி இடுவது எனது இஷ்டம் அதனை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டியது இல்லை என்றேன். அதற்கு கார்த்திக் ,முத்துக்குட்டி மற்றும் பெயர் தெரியாத பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய சிலர் சேர்ந்து என் கடைக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னை அடித்தார்கள். கத்தியால் வயிற்றில் குத்தினார்கள்.
மேலும் நான்கு நபர்கள் சேர்ந்து இரும்புக் கம்பியால் அடித்து என் மண்டையை உடைத்தனர்.

பிறகு என்னை வெளியே இழுத்துப்போட்டு கொலை மிரட்டல் விடுத்தனர் என தெரிவித்த ஜெயகுமார் நான் காலதாமதமாக புகார் தெரிவிப்பதற்கு காரணம் என் உடல்நிலை தற்போது தான் தேறி உள்ளது என்றார்.மேலும் புகார்தாரர் ஜெயக்குமார் ஸ்டுடியோவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்துவது தொடர்பான சிசிடிவி காட்சியையும் காவல் நிலைத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக d1 ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாஜக நிர்வாகியை பாஜகவினரே தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக், முத்துகுட்டி உள்ளிட்ட 4 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!

ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…

29 minutes ago

நீங்களாம் என் படத்தை பார்க்க கூடாது- மேடையில் எச்சரித்த நானி பட இயக்குனர்! என்ன காரணமா இருக்கும்?

நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…

31 minutes ago

திமுக நிகழ்ச்சியில் பீர் பாட்டிலுடன் கறி விருந்து.. இளைஞரணி நிர்வாகி மறுப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…

60 minutes ago

திடீரென சமந்தாவுக்கு உருவான கோவில்! பிறந்தநாளில் இப்படி ஒரு சம்பவமா?

டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…

1 hour ago

சிக்னலுக்காக காத்திருந்த ரயிலுக்குள் புகுந்த கும்பல்… கத்தியை காட்டி நகை, பணம் கொள்ளை!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…

2 hours ago

நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…

இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…

2 hours ago

This website uses cookies.