எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக எழுதிய கடிதத்திற்கு பதில் அளிக்காதது ஏன்..? என்பது குறித்து பேரவையில் பதில் அளிக்கப்படும் என பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு மற்றும் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் 19 ம் தேதி வரை இரண்டு நாட்கள் பேரவை கூட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 22-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் பதிலுரை வாக்கெடுப்பு நடைபெறும்.
நாளை நடைபெறும் பேரவை கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தேவைப்பட்டால் விவாத த்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்தி எதிர்ப்பு அறிக்கை குறித்தும் விவாதிக்கபட உள்ளது.
எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் 4 கடிதமும் ஓ.பி.எஸ் தரப்பு இரண்டு கடிதமும் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பேரவையில் கடிதம் கொடுத்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் பட்சத்தில் உரிய பதில் பேரவையில் அளிக்கப்படும், இது குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க முடியாது.
இந்த விவகாரம் குறித்து கடிதம் அளித்துள்ள அதிமுக உறுப்பினர்கள் தனது அறையிலும் வந்து இதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். தங்களது கட்சியின் பொன்விழா காரணமாக இன்றைய பேரவை கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தனக்கு தகவல் கிடைத்துள்ளது. நாளை பேரவை கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என கருதுகிறேன், என தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.