சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை விறுவிறு… திமுக எம்பி ஆ.ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்…!!

சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசா உள்ளிட்ட பலர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை என்றும், தேவையான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் தினசரி விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி சிபிஐ வலியுறுத்தியுள்ளது. இது திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் தனியாக ஆ. ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவருக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

1999ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்பி ஆ.ராசா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பலமுறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

மொத்தம் 16 பேர் மீது அப்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ 5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் மட்டுமின்றி மொத்தம் 5 பேர் மீது இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக வரும் டிசம்பர் 10ம் தேதி நேரில் ஆஜராகுமாறு திமுக எம்பி ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் 4 பேருக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

கூலி படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்… படக்குழு எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்!!

ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் கூலி…

5 minutes ago

தாலியைப் பறித்த பெற்றோர்.. பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை:…

19 minutes ago

கோவையில் பிரபல தொழிலதிபரின் 10 வயது மகன் கடத்தல்… பணம் கேட்டு மிரட்டிய கார் ஓட்டுநர்.!!

கோவை வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா. இவர்களுக்கு இரண்டு…

1 hour ago

கண்ணாமூச்சி ஆடும் தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 17) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 210…

2 hours ago

காதலிக்காக போட்ட திட்டம்.. சென்னையில் இரட்டைக் கொலை.. ப்ளான் மிஸ்ஸிங்கால் பறிபோன உயிர்!

சென்னையில், காதலியின் கொலைக்கு பழிவாங்க நினைத்த நபர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.…

3 hours ago

This website uses cookies.