ராணுவ வீரருக்கு வழங்கிய நிலத்தில் அம்பேத்கர் சிலை வைக்க முயற்சி.. ஆளுங்கட்சி பிரமுகருக்கு எதிராக தீக்குளிக்க முயற்சி!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பெண்டபாடு மண்டலம் ரவிபாடு கிராமத்தை சேர்ந்த பலிவேல நாகேஸ்வர ராவ் ராணுவத்தில் மேஜர் சுபேதாராக பணியாற்றி வருகிறார்.

இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், வீடு கட்ட நிலம் தருமாறு அரசிடம் விண்ணப்பித்தார்.

இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு முன், நாகேஸ்வர ராவுக்கு, 3 சென்ட் நிலத்தை, மாநில அரசு ஒதுக்கி, பதவு சான்றிதழ் வழங்கியது.

நாகேஸ்வர ராவ் அங்கு வீடு கட்டத் தொடங்கினார். தற்போது ஸ்லாப்பும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆ.ர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி அந்த நிலத்தை அபகரிக்க முயன்றார்.

இதற்காக அங்குள்ளவர்கள் சொன்னதை கேட்டு ராணுவ வீரர் வீடு கட்டும் இடத்தில் அம்பேத்கர் சிலையை அங்கு வைத்தால் அந்த இடம் உங்களுடையதாகிவிடும் என்று சிலர் அவரை தூண்டி விட்டனர்.

இதனால் பட்டியிலனத்தவர்களுடன் அம்பேத்கர் சிலையை கொண்டு சென்று கட்டுமானப் பகுதியில் வைக்க முயன்றனர். இராணுவ வீரருக்கு ஆதரவாக வந்தவருக்கும் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மோதலை தற்காலிகமாக தணித்தனர். இந்நிலையில் நேற்று காலை வருவாய்த் துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்தனர்.

அரசு ஒதுக்கிய நிலத்தின் சர்வே எண் தவறானது எனக் கூறி 24 மணி நேரத்தில் கட்டடத்தை இடிக்க நாகேஸ்வர ராவ் குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: பிரதமர் மோடி தியான நிகழ்ச்சியை உடனே ரத்து செய்யுங்க.. திமுக திடீர் மனு!

அந்த நோட்டீசுகளை பெற மறுத்ததால் கட்டுமான பணி நடந்து வரும் சுவரில் ஒட்டியுள்ளனர். இடம் கொடுத்து விட்டு, தற்போது இடிப்பதில் அதிகாரிகள் இரட்டை அணுகுமுறை காட்டுவதாக நாகேஸ்வர ராவ் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் நாகேஸ்வரராவ் மனைவி விஜயலட்சுமி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு வந்த டிஎஸ்பி மற்றும் போலீசார் அதனை தடுத்தனர்.

30 ஆண்டுகள் தேசப் பாதுகாப்பில் பணியாற்றிய ராணுவ வீரருக்கு அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா என நாகேஸ்வரராவ் வருத்தம் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பிறப்பித்த நோட்டீஸ்களை நீக்க வேண்டும்.. இல்லாவிட்டால் உயிரை மாய்ப்போம் என ராணுவ அதிகாரியின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் புர்கலா ராமசத்தியநாராயணா இந்த நிலத்தை அபகரிக்க இவ்வாறு செய்கிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.